• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1956-ஆம் ஆண்டு…

தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் கனிமொழி ஆய்வு…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.  இந்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, நெல்லை, தஞ்சை, திருச்சி, திருவாரூர்,…

‘ஜம்தாரா கொள்ளையர்கள்’ 3 பேர் கைது.., அதிரடி காட்டிய சைபர் கிரைம் போலீஸ்..!

கோடம்பாக்கத்தைச் சேர்ந்த முதியவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம், செல்போன் சேவை துண்டிக்கப்பட உள்ளதாகக் கூறி ஓடிபி பெற்று ரூ. 13 லட்சம் பணத்தை மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் கொல்கத்தாவிற்குச்…

தீபாவளி பண்டிகை எதிரொலி..,சில சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பேருந்துகள் மற்றும் ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, சில சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக மதுரைக்கோட்ட தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருவனந்தபுரம் செல்லும் ரயில்களிலும்,…

*பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் திருவுருவ சிலைக்கு திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மலர்வளையம் வைத்தும் மலர்தூவி அஞ்சலி*

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா, ஜெயந்தி விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக, எம்எல்ஏக்கள் மலர்வளையம் வைத்தும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் பிள்ளையார் பட்டி குருக்களின் யாகசாலை…

10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய பூவந்தி கண்மாய்…

தொடர்மழை எதிரொலி, 10 ஆண்டுகளுக்கு பிறகு மாறுகால் பாயும் பூவந்தி கண்மாய். ஆபத்தை உணராமல் ஆனந்தமாக கண்மாயில் விளையாடும் இளைஞர்கள். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பூவந்தி கண்மாய் தொடர் மழை காரணமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. சிவகங்கை மாவட்ட…

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் செல்லூர் ராஜூ, ஆர் பி உதயகுமார், விஜயபாஸ்கர், ராஜன், செல்லப்பா ஆகியோர் மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக…

*மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்-அண்ணாமலை*

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது திருவுருவச்…

பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து ஒழுக்க சீலராக வாழ்ந்தவர் தேவர் – வைகோ புகழாரம்..!

தனது வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து ஒழுக்க சீலராக வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என வைகோ புகழாரம் சூட்டியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள அவரின் சிலைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள்…

வடலூர் சந்தை – ரூ.3 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்…

கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெறும் சனிக்கிழமை வாரச் சந்தை மிகவும் பிரபலமானது. ஆடு, மாடு, கோழி, முயல் உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளிலிருந்தும் மொத்த வியாபாரிகளும், சில்லறை விற்பனையாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், தீபாவளியை…