• Sat. Apr 27th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 666

குறள் 666

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின் பொருள்(மு.வ): எண்ணியவர்‌ (எண்ணியபடியே செயல்‌ ஆற்றுவதில்‌) உறுதியுடையவராக இருக்கப்‌ பெற்றால்‌, அவர்‌ எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்‌.

குறள் 665

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறெய்தி உள்ளப் படும் பொருள் (மு.வ): செயல்‌ திறனால்‌ பெருமை பெற்று உயர்ந்தவரின்‌ வினைத்‌ திட்பமானது, நாட்டை ஆளும்‌ அரசனிடத்திலும்‌ எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்‌.

குறள் 664

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல் பொருள்(மு.வ):"இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்‌' என்று சொல்லுதல்‌ எவர்க்கும்‌ எளியனவாம்‌ ; சொல்லியபடி செய்து முடித்தல்‌ அரியனவாம்‌.

குறள் 663

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமந் தரும் பொருள்(மு.வ):செய்யும்‌ செயலை முடிவில்‌ வெளிப்படும்படியாகச்‌ செய்யும்‌ தகுதியே ஆண்மையாகும்‌; இடையில்‌ வெளிப்பட்டால்‌ நீங்காத துன்பத்தைக்‌ கொடுக்கும்‌.

குறள் 662

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் பொருள்(மு.வ):இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல்‌, வந்தபின்‌ தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்‌ திட்பம்‌ பற்றி ஆராய்ந்தவரின்‌ கொள்கையாம்‌.

குறள் 661

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற பொருள்(மு.வ):ஒரு தொழிலின்‌ திட்பம்‌ என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனத்தின்‌ திட்பமே (உறுதியே) ஆகும்‌; மற்றவை எல்லாம்‌ வேறானவை.

குறள் 661

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற பொருள்(மு.வ): ஒரு தொழிலின்‌ திட்பம்‌ என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனத்தின்‌ திட்பமே (உறுதியே) ஆகும்‌; மற்றவை எல்லாம்‌ வேறானவை.

குறள் 660

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று பொருள்(மு.வ):வஞ்சனையான வழியால்‌ பொருளைச்‌ சேர்த்துக்‌ காப்பாற்றுதல்‌, பச்சை மண்கலத்துள்‌ நீரைவிட்டு அதைக்‌ காப்பாற்றி வைத்தாற்‌ போன்றது.

குறள் 659

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை பொருள் (மு.வ): பிறர்‌ வருந்துமாறு செய்து பெற்ற பொருள்‌ எல்லாம்‌ பெற்றவன்‌ வருந்துமாறு செய்து போய்விடும்‌; நல்வழியில்‌ வந்தவை இழக்கப்பட்டாலும்‌ பிறகு பயன்‌ தரும்‌.

குறள் 658

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்முடிந்தாலும் பீழை தரும் பொருள் (மு.வ): ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கி விடாமல்‌ மேற்கொண்டு செய்தவர்க்கு, அச்‌ செயல்கள்‌ நிறைவேறினாலும்‌ துன்பமே கொடுக்கும்‌.