• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • திருக்குறள்

திருக்குறள்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை பொருள்(மு.வ): உண்பவர்க்குத்‌ தக்க உணவுப்‌ பொருள்களை விளைவித்துத்‌ தருவதோடு, பருகுவார்க்குத்‌ தானும்‌ ஓர்‌ உணவாக இருப்பது மழையாகும்‌.

திருக்குறள்

வான் சிறப்பு -1 வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று பொருள் (மு.வ): மழை பெய்ய உலகம்‌ வாழ்ந்துவருவதால்‌, மழையானது உலகத்து வாழும்‌ உயிர்களுக்கு அமிழ்தம்‌ என்று உணரத்‌ தக்கதாகும்‌.

திருக்குறள்

கடவுள் வாழ்த்து பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார் பொருள்‌ (மு.வ): இறைவனுடைய திருவடிகளைப்‌ பொருந்தி நினைக்கின்றவர்‌ பிறவியாகிய பெரிய கடலைக்‌ கடக்க முடியும்‌: மற்றவர்‌ கடக்க முடியாது.

திருக்குறள்‌

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை பொருள்‌(மு.வி): கேட்காத செவி பார்க்காத கண்‌ முதலியனபோல்‌ எண்‌ குணங்களை உடைய கடவுளின்‌ திருவடிகளை வணங்காதவரின்‌ தலைகள்‌ பயனற்றவைகளாம்‌.

திருக்குறள்

கடவுள் வாழ்த்து – குறள் – 9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை பொருள்(மு.வ): கேட்காத செவி பார்க்காத கண்‌ முதலியனபோல்‌ எண்‌ குணங்களை உடைய கடவுளின்‌ திருவடிகளை வணங்காதவரின்‌ தலைகள்‌ பயனற்றவைகளாம்‌.

திருக்குறள்

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிது பொருள் (மு.வ): அறக்கடலாக விளங்கும்‌ கடவுளின்‌ திருவடிகளைப்‌ பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல்‌, மற்றவர்‌ பொருளும்‌ இன்பமுமாகிய மற்றக்‌ கடல்களைக்‌ கடக்க முடியாது.

திருக்குறள்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது பொருள்(மு.வ): தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப்‌ பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல்‌, மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

திருக்குறள்

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார் பொருள்(மு.வ): ஐம்பொறி வாயிலாகப்‌ பிறக்கும்‌ வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில்‌ நின்றவர்‌, நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்‌.

திருக்குறள்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு பொருள் (மு .வ): கடவுளின்‌ உண்மைப்‌ புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம்‌, அறியாமையால்‌ விளையும்‌ இருவகை வினையும்‌ சேர்வதில்லை.

திருக்குறள்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல பொருள் (மு.வ): விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின்‌ திருவடிகளைப்‌ பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும்‌ எவ்விடத்திலும்‌ துன்பம்‌ இல்லை.