• Sat. Apr 27th, 2024

திருச்சிராப்பள்ளி

  • Home
  • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்துக்கு அனுமதியின்றி வாக்கு சேகரிக்க சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் அஜித்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் நா.த.க. வேட்பாளர் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஊழலற்ற தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள்-ஜே.பி.நட்டா பேச்சு

ஊழலற்ற தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள் – பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரிவேந்தர் ஆதரித்து பிஜேபி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக…

திருச்சி சிவா பிரச்சாரம்…

பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபால்பட்டியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ரோட் ஷோ-வில் பங்கேற்பு

பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா திருச்சி தில்லைநகர் கண்ணப்பா ஹோட்டலில் இருந்து உறையூர் சாலை ரோடு வழியாக நாச்சியார் கோவில் பேருந்து நிலையம் வரை ரோட் ஷோ-வில் பங்கேற்று வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு பாஜக கூட்டணி கட்சி அம்மா…

இந்தியா கூட்டணி குறித்து ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் கருப்பையாவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி… இந்தியா கூட்டணி குறித்து ஒரு மாயத்…

கச்சத்தீவை சட்டபூர்வமாக மீட்பது சாத்தியம்தான் – திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மதிமுக தேர்தல் அலுவலகத்தில் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் அறிக்கையாக சுயாட்சியும் கூட்டாட்சியும் மதச்சார்பின்மை சமூக நீதி தமிழ் ஆட்சி மொழி கல்வி நதிநீர் உரிமைகள் சிறுபான்மையினர் நல தாழ்த்தப்பட்டோர் மற்றும்…

திருச்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் துரை வைகோவை ஆதரித்து திருவானைக்காவல் பகுதியில் தி.மு.க இளைஞரணி செயலாளரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் பேசிய அவர்.., திருச்சியில் போட்டியிட்ட தி.மு.க கூட்டணி…

மண்ணச்சநல்லூரில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி இன்று மாலை 6 மணி அளவில் மண்ணச்சநல்லூர் பகுதியில் பிரச்சாரம் செய்வதாக அக்கட்சியின் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே திருச்சியில் இருந்து…

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடி 3வது முறையாக வெற்றி பெறப் போகும் தேர்தல் இது- அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பேச்சு

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடி 3வது முறையாக வெற்றி பெறப் போகும் தேர்தல் இது – மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கான திட்டங்களை பெற்றுத்தர, படித்த, மணல் கடத்தாத, மக்கள் சொத்துக்களை அபகரிக்காத அ.ம.மு.க., வேட்பாளரை வெற்றி பெறச்…

மோடி சுடும் வடையை கூட மக்களுக்கு தராமல் அவரே சாப்பிட்டு விடுகிறார் – திருச்சி பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்தில் பேசிய அவர், இந்த முறை அருண்…