தேமுதிக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி!
தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை சற்று நேரத்தில் பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கவுள்ளார்.
அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, 17 பேர் கொண்ட 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.நேற்று 16 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கான 17 பேர் கொண்ட வேட்பாளர்கள்…
தெலுங்கானா டிபன் சென்டரில் வெடித்த கேஸ் சிலிண்டர்…
வனஸ்தலிபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டிபன் சென்டரில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. 📹சிசிடிவி காட்சிகள்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் தற்போது அமலாக்கத்துறையின் சோதனை நடத்தி வருகின்றனர்.
குரூப்- 2 பதவிக்கு நேர்முக தேர்வு
குரூப்-2 பதவியில் 29 காலி பணியிடங்களை நிரப்ப 3ம் கட்ட நேர்முக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது . பிரதான தேர்வில் தேர்ச்சியடைந்து தரவரிசையில் முன்னிலை பெற்றவர்களுக்கு இன்று நேர்முகத் தேர்வு நடத்தி பணி ஒதுக்கீடுசெய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு…
இலவசமாக கொடுத்துடுங்க தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தேர்தல் ஆணையம்…
திருச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் பயணத் திட்டம் வெளியீடு’ . மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் நாளை தனது பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். . திருச்சி, பெரம்பலூர் வேட்பாளர்களை ஆதரித்து நாளை வாக்கு…
20 மீனவர்கள் சிறைப்பிடிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 20 பேருடன் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது.