மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி கண்மாயில் இரவு நேரங்களில் அனுமதியின்றி வண்டல் மண் திருடுவதாக வந்த தகவலை அடுத்து, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது,

அங்கு இரண்டு பொக்லைன் இயந்திரங்களை வைத்து, ஐந்துக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் வண்டல் மண் திருடுவதை அறிந்து அவர்களை சுற்றி வளைத்து ,இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் மூன்று டிராக்டர்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்




