11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் – மாநில தேர்தல் ஆணையம்!..
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்டங்களாக வரும் 6 மற்றும் 9 தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது,…
தமிழகத்துக்கு ரூ.1100 கோடி ரூபாய் கடன் உதவி!..
சென்னை மாநகரத்தை உலகத்தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்க்கு சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தையும் உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் கடன் வழங்க, உலக வங்கி…
100 ரூபாயை தாண்டிய பெட்ரோல் விலை!..
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 99.80 ரூபாய், டீசல் லிட்டர் 95.02 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து 100.01 ரூபாய்க்கும், டீசல் விலையில் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து 95.31…
மதுரையில் காந்தியடிகளின் பிறந்த நாளில் அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் மரியாதை!..
மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள காந்தி சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில்…
திமுக வீரபாண்டி இராஜா உடலுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி..
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில தேர்தல் பணிக் குழு செயலாளருமான வீரபாண்டி ராஜா மறைவிற்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கேபிள் டி.வி. தலைவர் குறிஞ்சி சிவகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள்…
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வீரபாண்டி ராஜா உடலுக்கு நேரில் அஞ்சலி!….
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டிராஜாவின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்… முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா இன்று பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் அவர் திடீரென…
காந்திஜெயந்தியையொட்டி கன்னியாகுமரியிலுள்ள காந்திமண்டபத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் மாலையணிவித்து மரியாதை!..
மஹாத்மா காந்தியடிகளின் 153வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடபட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டிலுள்ள காந்தி மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை…
மாணவ மாணவிகள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி!..
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில் இருந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடைபெற்றது. போதை மனித வாழ்விற்கு எதிரானது, போதையால் ஆரோக்கியம் கெடுகிறது என்ற பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புத்தகங்கள், துண்டு…
7 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்த இளையாங்குடி பேரூராட்சி!..
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி வட்டம் மற்றும் நகர் பேரூராட்சி பகுதிக்கும் கொ.இடையவலசை கிராம ஊராட்சி பகுதிக்கும் இடைப்பட்ட பாரதியார் நகரில் நீண்டகாலமாக பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.இந்த பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்…
நாகர்கோவில் இடியுடன் கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!..
இலங்கை அருகே ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழையும் இடி மின்னலுடன் சூறைக் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பிற்பகல் முதல் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை,…




