விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சோலைசேரியில் காமத்தில் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு மாரியம்மன் கோவில் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட காமராஜரின் திருஉருவப்படத்திற்கு தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட செயலர் ரமேஷ் தலைமையில்,

உறவின்முறை தலைவர் ஆதிநாராயணன், பொருளாளர் அயோத்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அப்பகுதியில் பயிலக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.




