• Thu. Apr 25th, 2024

தமிழகம்

  • Home
  • 500 கிலோ கோவில் தங்க நகைகள் உருக்கப்பட்டுள்ளன – தமிழக அரசு

500 கிலோ கோவில் தங்க நகைகள் உருக்கப்பட்டுள்ளன – தமிழக அரசு

தமிழக கோவில் நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில் 2 வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல்,…

திருவள்ளூரில் ரூ.1,200 கோடி முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் – முதல்வர் முன்னிலையில் கையெழுத்து!..

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், நேஷனல் ஹைவே லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், திருவள்ளூர் மாவட்டம், மப்பேட்டில் ரூ.1,200 கோடி முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை தொடங்குவதற்கான புரிந்துணர்வு…

தமிழகத்தில் 3 ஆயிரம் பேருக்கு டெங்கு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!..

சென்னை கண்ணகி நகரில் நேற்று கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிட்டு, சேலம்…

விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை!..

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சுழலில் வருகிற வெள்ளிக்கிழமை விஜயதசமி என்பதால், இதை முன்னிட்டு அனைத்து கோவில்களையும் திறக்க அரசுக்கு…

“காசு தரல.. ஓட்டு இல்ல” – உள்ளாட்சித் தேர்தல் காமெடிகள்

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்று வருகிறது. தி.மு.க பல்வேறு இடங்களில் அமோக வெற்றியும், பல்வேறு இடங்களில் தொடந்து முன்னிலை பெற்றும் வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு காமெடிகளும் நடைபெற்று வந்துள்ளன. ஓட்டு பெட்டியில்…

ஒரு வாக்குப்பெற்ற கோவை நபருக்கு வாய்ப்பளிக்கப்படும் – பா.ஜ.க மாநிலத்தலைவர்!..

கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த 13 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றது. இதில் பெரியநாயக்கன் பாளையம் ஓன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.…

கடையநல்லூரில் கனமழையால் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி!..

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தொடர் மழையின் காரணமாக அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் கடையநல்லூர் பகுதியில் உள்ள பல குளங்களில்…

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கம்!..

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும் சுயேட்சையாக போட்டியிட்டனர். அவர்கள் விஜய் படம் பதித்த கொடியினை பயன்படுத்தியதால், இதை தடைவிதிக்க…

குமரியை கஞ்சா போதையில்லா மாவட்டமாக மாற்ற வேண்டும் – பாஜக மகளிர் அணி ஆட்சியாரிடம் மனு!..

குமரி மாவட்டத்தை கஞ்சா போதையில்லா மாவட்டமாக மாற்ற வேண்டும் என கோரி பாஜக மகளிர் நிர்வாகிகள் மாவட்ட எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியாரிடம் மனு அளித்தனர். பாஜா மாநில செயலாளர் உமாரதி ராஜன் தலைமையில் மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில்…

ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு – போக்குவரத்து தடை!..

ஏழைகளின் ஊட்டி ஏற்காடு. கொரோனா பரவல் காரணமாக இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படாத நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தான் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சேலத்திலும்…