நீர்நிலைகள், ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
கன்னியாகுமரி மாவட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அனைத்து அரசியல் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக…
திருமண உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு-முதல்வர் அறிவிப்பு
தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் திருமண உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021- 2022ஆம்…
சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.…
48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு
கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் 23(2) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா…
வெள்ளச் சேதம் குறித்தும் அமைச்சரவைக் கூட்டம்
வரும் நவம்பர் 19 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. வருகிற வெள்ளிக்கிழமை நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வெள்ளச் சேதம் குறித்தும் நிவாரண நிதி குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
ராஜாக்கண்ணுவின் மனைவிக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கிய சூர்யா
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ஜெய்பீம். உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா துறையினரும், ரசிகர்களும் படத்தைக் கொண்டாடி வந்தாலும், படத்திற்கு எதிராக சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மாநில மார்க்சிஸ்ட்…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெரும் – சரவணன்
பாஜகவின் மதுரை மாநகர மாவட்ட தலைவராக டாக்டர் சரவணன் பதவியேற்பு நிகழ்ச்சி மதுரை காளாவாசல் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டாக்டர்…
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரவிசந்திரன் இன்று பரோலில் வெளிவந்தார்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க ரவிசந்திரன் தாயார் முதல்வருக்கு மனு அளித்தார். தொடர்ந்து ரவிச்சந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்த பரிசீலனையின்…
வணிகவரித்துறையினர் பணியிட மாற்றத்தை கண்டித்து அறிக்கை
வணிகவரித்துறையில் பொதுமக்களின் நலன் கருதி எனக்குறிப்பிட்டு 100க்கும் மேற்பட்ட கடைநிலை அலுவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வன்மையாக கண்டித்துள்ளது. இதுபற்றி வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் லெட்சுமணன், ஜனார்த்தனன்,…
ஸ்ரீ வில்லிபுத்தூரில் நேற்று இரவு நடைபெற்ற கொலையை கண்டித்து சாலை மறியல்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்தவர் சுபாஷ் (29). இவர் வத்திராயிருப்பு- கிருஷ்ணன் கோயில் சாலையில் தனியார் பார் முன்பு நேற்று இரவு வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் தகவல் அறிந்த…




