மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது..,
வேடசந்தூர் அருகே மதுக்கடை பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலுர் புங்கம்பாடி டாஸ்மாக் மதுக்கடைக்கு பின்புறமாக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள்…
தொட்டா போச்சு ரூபாய்..,
வட மாநில இணையதள மோசடி கும்பலானது தற்பொழுது இணையத்தில் இதை கிளிக் செய்தால் உங்களுக்கு பரிசு பொருட்கள் கிடைக்கும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புகைப்படத்தை போட்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் விஜய் 1499 ரூபாய் தருகிறார். உடனடியாக இதை கிளிக்…
பதுக்கி வைத்த 2.4 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் கைது..,
கோவை, பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமசெட்டிபாளையம் பகுதியில், விற்பனைக்காகக் கஞ்சாவைப் பதுக்கி வைத்து இருந்த மூன்று வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இடம் இருந்து 2.400 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.…
குடிபோதையில் 4 பேர் அடித்ததில் பெயின்டர் பலி …
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் பகுதியை சேர்ந்தவர் மதிச்செல்வம் (55). இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார் . மேலும் மதிச்செல்வம் அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு வருடங்களாக தனியாக வசித்து…
கோவையில் வெளிநாட்டு மதுபானங்கள் சிக்கின; வாகன சோதனையில் அதிரடி..,
கோவையில் போலீசார் வாகன சோதனையில் வெளிநாட்டு மதுபானங்கள் சிக்கி உள்ளன. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவினர் வாகன தணிக்கையின் போது வெளிநாட்டு ரக மதுபானங்களை…
ஒரிசாவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தியவர் கோவையில் கைது..,
ஒரிஸ்ஸா மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் போத்தனூர் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவரை சோதனை செய்தனர்.அவரிடம் இருந்த பைகளில் சுமார் 4 கிலோ கஞ்சா…
கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 28 வயது இளம் பெண்!!
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் தீவிரன் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு* கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த…
முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்!!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன், இவர் திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராக இருக்கின்றார். இவர் கெங்குவார்பட்டி பகுதியில் தனியார் மதுபான கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் அதே பகுதியில் அரசு மதுபான பார்…
பைக்கில் உள்ள மற்றொரு ஹெல்மட்டை திருடி செல்லும் நபர்..,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பேரூராட்சி பேருந்து நிறுத்தத்திற்கு பின்புறம் இருசக்கரம் வாகன காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியூர் சென்ற நிலையில் மீண்டும் தனது இருசக்கர வாகனத்தை…
இராஜபாளையம் அருகே இளைஞர் அடித்து கொலை!!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மாரியப்பன் வயது 35 மாரியப்பனுக்கும் தங்கமாரி என்பவருக்கும் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் மாரியப்பன் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாத காரணத்தினால் தங்கமாரி கடந்த…





