இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது
உசிலம்பட்டி அருகே வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து எழுமலை பகுதிக்கு கஞ்சா கடத்தி…
பொது செயலாளர் அல்போன்ஸ் பேச்சால் பரபரப்பு
பெற வேண்டிய உரிமையை போராடி பெற வேண்டும். உங்கள் பையில் இருந்து எடுத்து கொடுத்து போக்குவரத்து நிர்வாகத்தை சோம்பேறியாக்க வேண்டாம் என உசிலம்பட்டியில் திமுக தொ.மு.ச பொதுச்செயலாளர் அல்போன்ஸ் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை…
அங்காள ஈஸ்வரி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா
உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி மற்றும் நொண்டி கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு…
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
சேமநல முத்திரை தாள் கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தியதைக் கண்டித்து உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்த கோரியும், சேமநல முத்திரை தாள் கட்டணம் 30 ரூபாயிலிருந்து…
ஜாக்டோ ஜூயோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த கோரியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி உசிலம்பட்டியில் ஜாக்டோ ஜூயோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த கோரி, ஜாக்டோ…
நகராட்சி அலுவலர்கள் அதிரடியாக அகற்றிய ப்ளக்ஸ் பேனர்கள்
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உசிலம்பட்டி நகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட ப்ளக்ஸ் பேனர்களை நகராட்சி அலுவலர்கள் அதிரடியாக அகற்றினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என நான்கு மாவட்டங்களை இணைக்கும்…
உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோவில் கும்பாபிஷேகம்
உசிலம்பட்டி அருகே சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்பு ஆண்டிச்சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயககனூர் ஊராட்சிக்குட்பட்ட நோட்டம்பட்டியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்பு கோவில் புனரமைப்பு செய்து ஆண்டிச்சாமிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள்…
பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை உச்சம்
கடும் பனிப்பொழிவு காரணமாக உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் பனிப்பொழிவு காரணமாக உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைந்து காணப்படுகிறது. தை…
இந்த அரசு நம் நாட்டிற்கு தேவையா?டி.கே.எஸ் இளங்கோவன் பேச்சு…
மக்கள் எதிரியாக பாஜக இருக்கிறது, மனித நன்மையில் அக்கறை இல்லாமல் மத பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்பதை எண்ணி பார்க்கும் போது இந்த அரசு நம் நாட்டிற்கு தேவையா என்ற எண்ணம் தான் வருகிறது என உசிலம்பட்டியில் திமுக தலைமை செய்தி தொடர்புகுழு…
மஹா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா
உசிலம்பட்டி அருகே 50 ஆண்டு பழமை வாய்ந்த மஹாகணபதி ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வின்னகுடி கிராமத்தின் மையப்பகுதியில் மஹா கணபதி ஆலயம் அமைந்துள்ளது. 50 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் புரணமைப்பு பணிகள்…




