• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

தமிழகம்

  • Home
  • சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சாலையோர வியாபாரிகள்..!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சாலையோர வியாபாரிகள்..!

ஏற்காட்டில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீண்டும் அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வார இறுதி நாட்கள் மற்றும்…

கல்வி உதவிக்காக, புதிய இணையதளம்! – ரஜினி அறக்கட்டளை

நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில், தற்போது புதியதாக கல்வி உதவிக்காக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ரஜினிகாந்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த அறக்கட்டளை, ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்வியை மேம்படுத்துவதற்காகவும், முற்போக்கான சிந்தனை, நிலையான பொருளாதார…

சேலம் – விருத்தாச்சலம் புதிய மின்வழித்தடத்தில்.., அதிவேக ரயிலை இயக்குவதற்கான ஆய்வுப்பணி துவக்கம்..!

சேலம்,விருத்தாச்சலம் பாதையில் மின் வழித்தடம் அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து அதிவேக ரயிலை இயக்குவதற்கான ஆய்வு துவங்கியது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் விருத்தாச்சலம் ரயில் பாதை மீட்டர் கேஜில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றி 13 ஆண்டுகளைக்…

சேலத்தில் இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டம்..!

சேலத்தில் இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் ஜாகிர் காமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளியான இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக இலவச வீட்டுமனை…

கேட் வழியாக எட்டிப்பார்த்த நாயை அலேக்காகத் தூக்கிய சிறுத்தைப்புலி..!

கேட்டின் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நாய், சிறுத்தை உள்ளே வருகிறது என்று உணர்ந்தது மட்டும் தான் மிச்சம். வந்த வேகத்தில் நாயை அடித்து தூக்கிச் சென்ற சிறுத்தைப் புலியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாம் அனைவரும்…

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் – மதுரை மாநகராட்சி அறிவிப்பு!

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை நடைபெறுகிறது என அறிவிப்பு. மதுரை மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை நடைபெறுகிறது. அதன்படி, நாளை…

தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு..!

அரையாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு அரசு தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் கடந்த செப்டம்பர் முதல் தொடங்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருவதைத் தொடர்ந்து,…

உடனடியாக மாற்று வீடுகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

திருவொற்றியூரில் 24 குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில், அங்கு குடியிருந்தவர்களுக்கு மாற்று வீடுகள் மற்றும் நிதிஉதவிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். சென்னை திருவொற்றியூர் பகுதியில் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 24 வீடுகளைக்கொண்ட குடிசை…

புதிய பென்சன் திட்டத்தை நிறைவேற்றக் கோரி.., அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் போராட்டம்..!

புதிய பென்சன் திட்டம் உள்ளிட்ட திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓய்வூதியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் எனவும் ஓய்வூதியர்…

வேலூர் மாநகராட்சியில் டெங்கு பணி குறித்த ஆய்வு..!

வேலூர் மாநகராட்சி மண்டலம் இரண்டு வார்டு 24 பகுதி-2, 12-வது தெருவில் டெங்கு பணி நடைபெறுவதை சுகாதார அலுவலர் சிவக்குமார் அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும் சுற்றியுள்ள வீடுகளில் உள்ள பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தங்கள் வீடுகளில் மாடிமேல்…