அகஸ்தீஸ்வரத்தில் அரசு பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்த காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த்
இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற முதல் கட்ட பொது தேர்தலில். இந்தியாவின் தென் கோடி எல்லையான, தமிழகத்தின் 39_வது நாடாளுமன்ற தொகுதியில், கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் அரசுப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்கை…
கோவை காமராஜர் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்த விசுவல், வானதி சீனிவாசன் பேட்டி
கோவை டாடாபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பா.ஜ.க மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வாக்களித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளிலும் வெற்றி வேட்பாளராக களத்தில் நின்று கொண்டு இருக்கிறார்கள். அத்தனை தரப்பு மக்களும் மோடி மீது…
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனதுஜனநாயக கடமை ஆற்றினார்
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவியுடன் வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றினார்.
தனது வாக்கினை பதிவு செய்த நடிகர் ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் அசோக் நகர் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
ஜனநாயக கடமை ஆற்றினார் நடிகை திரிஷா
நடிகை திரிஷா சென்னை டிடிகே சாலையில் அமைந்துள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் ஜனநாயக கடமை ஆற்றினார்.
நடிகர் தனுஷ் வாக்களித்தார்
நடிகர் தனுஷ் சென்னை டிடிகே சாலையில் அமைந்துள்ள சென் பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் வாக்களித்தார்.
நடிகர் சரத்குமார் தங்களது வாக்கினை பதிவு செய்தார்
நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார். மகள் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர்கள் சென்னை கொட்டிவாக்கத்தில் அமைந்துள்ள நெல்லை நாடார் பள்ளியில் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்