• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அனைவருக்கும் அரசியல்டுடே  இனிய  தீபாவளி நல்வாழ்த்துக்கள் 

அனைவருக்கும் அரசியல்டுடே  இனிய  தீபாவளி நல்வாழ்த்துக்கள் 

  தமிழக மக்களுக்கும் வாசகர்களுக்கும்,விளம்பரதாரர்களுக்கு எங்களது  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்  கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா என்ற பெரும் தொற்று காரணமாக நாடு  முழுவதும் திருவிழாக்கள் பண்டிகைகள் சிறப்பாக கொண்டாட முடியாமல் போனது தொழில்கள் முடங்கின வருவாய் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். சிறு குறு தொழில்கள் முடங்கியது. அன்றாடக் கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமப்பட்டனர்,பலர் வேலை இழந்தனர்.இந்த சூழ்நிலையில் கடந்த  2 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனாதொற்றின் வீரியம் குறைந்தது. அடுத்து இந்த ஆண்டு  அனைத்து பண்டிகைகளும், திருவிழாக்களும் வெகு உற்சாகமாக  கொண்டாடப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாடப்படும் தீபாவளி  பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். அனைவரும் புத்தாடை வாங்கியும், இனிப்புகளை வாங்கியும் வீடுகளில் தீபங்களை ஏற்றி கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த தீபாவளியை அனைத்து மக்களும் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரை அனைவரும்  கொண்டாட்டத்தின்  முகமாக உற்சாகமாக பட்டாசு வெடிப்பார்கள் அந்தப் பட்டாசை மிகவும் பாதுகாப்பான முறையில் வெடிக்க வேண்டும், சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள்  துணை நிற்க வேண்டும். ஆபத்தை விளைவிக்கும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க  வேண்டும். பாதுகாப்பான பட்டாசை வெடித்து மகிழ்ச்சியுடன் இந்த ஆண்டு  தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோளாக உள்ளது மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் Thazhali News & Media அரசியல் டுடே சார்பாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!  

நாளை தீபாவளி பண்டிகை தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி பண்டியை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக மக்களுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிமக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுன் என்னும் அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.…

எல்லையில் தீபாவளி கொண்டாடிய ராணுவத்தினர்

கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் தீபாவளி கொண்டாடத நிலையில் இந்தாண்டு மிகவும் கோலாகலமாக தீபாவளி கொண்டாட தொடங்கியுள்ளனர். ஆனால் நாமெல்லாம் விடுமுறையுடன் தீபாவளியைகொண்டாட தயாரான நிலையில் தங்கள் குடும்பத்தையும் மறந்து ராணுவ வீரர்கள் நாட்டுக்காக எல்லைச்சாமியாக நிற்கின்றனர். இந்நிலையில் காஷ்மீர்,பூன்ஞ்,அஹ்நூர்…

கே.எஸ்.அழகிரி ராஜினாமா செய்ய வேண்டும் – விவசாய சங்க பொதுச்செயலாளர் கோரிக்கை

தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரி ராஜினாமா செய்யவேண்டும் என காங்கிரஸ் விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ் .ராஜன் அறிக்கை.தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொது செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை:-தமிழ்நாடு…

ஆந்திர எல்லை புத்தூர் சுங்கச்சாவடியில் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறினையடுத்து தமிழ்நாட்டைச் சார்ந்த கல்லூரி மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வண்டிகள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.

கோவை கார் சிலிண்டர் விபத்து நடந்த இடத்தில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

சர்தார் படப்பிடிப்பின் லாரி ஓட்டும் காட்சியில், ரித்விக் உடன் இணைந்து கைதி BGM வாசித்த நடிகர் கார்த்தி!

கோவை, உக்கடம் கார் கேஸ் வெடிவிபத்து வழக்கில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது – டிஜிபி சைலேந்திரபாபு

சிவகாசியில் பட்டாசு விற்பனை அமோகம்

தீபாவளி என்றாலே பட்டாசு என்ற நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை 2 ஆண்டுகளுக்கு பிறகு அமோகமாக விற்பனையாகி உள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக சிவகாசியில் பட்டாசு விற்பனை களை கட்டியது.ஆன்லைன் உள்பட பல்வேறு ஆர்டர்களுக்கு பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டன.…

ஒளி தரும் தீபாவளியாக அமையட்டும்- கவர்னர் தமிழிசை வாழ்த்து

நாளை தீபாவளி திருநாளை முன்னிட்டு புதுவை கவர்னர் தமிழிசை தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.தமிழிசை வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் …தமிழகம், புதுவை, தெலுங்கானா மற்றும் அனைத்து இந்திய சகோதர-சகோதரிகளுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தீபாவளி மகிழ்ச்சியின் வரிசையாகவும்,…