• Fri. Mar 31st, 2023

எதிர்பாராமல்காவல் நிலையத்தில் வெடித்து சிதறய பட்டாசுகள்

பறிமுதல் செய்து வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் தக்கலை காவல் நிலைய மேல் மாடியில் ஒதுக்கி வைக்க பட்டு இருந்தன. இன்று எதிர் பாரத விதமாக வெடித்து சிதறியது காவல் நிலையத்தில் உள்ள கண்ணாடிகள், மற்றும் மேற் கூரைககலும் முற்றிலும் சேதமாகின மேலும் காவல் நிலைய மேல் மாடியில் எந்த காவல் அதிகாரிகளும் இல்லாத காரணத்தினால் பெரும் விபத்தானது தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து இந்த தீயை அணைக்கும் பணியில் தக்கலை தீ அணைப்பு துறையினார் விரைந்து ஈடுபட்டு வருகினர்.

மேலும் இந்த பட்டாசுகள் மாடியில் வைக்க பட்டத்தின் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. என காவலர்கள் தரப்பில் தெரிவித்தனர். அந்த பகுதியில் காவலர்கள் இல்லாததால் உயிர் சேதமும் தவிர்க்கபட்டது. பயங்கர சத்தத்தின் பேரில் உடனடியாக மேலே சென்று பார்த்தபோது தெரிய வந்தது.காவல் நிலைய சுற்று சுவரும் சேதம் அடைந்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *