எவரெஸ்ட்டின் உயரத்தை முதன்முதலாக கணித்த வங்காள கணித இயல் அறிஞர் இராதானாத் சிக்தார் நினைவு நாள் இன்று (மே 17, 1870)
இராதானாத் சிக்தார் (Radhanath Sikdar) அக்டோபர் 1813ல் பிறந்தார். 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த, வங்காள கணித இயல் அறிஞர். கொல்கத்தாவில் உள்ள இன்று பிரெசிடென்சிக் கல்லூரி என்று அழைக்கப்படும் பழைய இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். வங்காளத்துப் பெண்கள் கல்வியில் சிறப்பதற்காகவும், நல்லுரிமைப் பெற்று விளங்குவதற்காகவும் மாசிக் பத்திரிக்கா என்னும் இதழைத் தொடங்கினார். 1840ம் ஆண்டு மாபெரும் முக்கோணமுறை நில அளவீடு திட்டத்தில் சேர்ந்தார். 1852 ஆம் ஆண்டு எவரெஸ்ட்டின் (கொடுமுடி-15) உயரத்தை முதன்முதலாக சுமார் 8,848 மீட்டர் என்று கணித்தார். இதற்குப் பிறகே எவரெஸ்ட் சிகரமானது உலகின் மிகப்பெரியதென உலகத்தின் பிற ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1831 ஆம் ஆண்டு ஜார்ஜ் எவரெஸ்ட் கோள முக்கோண முறையில் (Spherical Trigonometry) குறிப்பிட்டத் திறமையுள்ள ஒரு நல்ல இளம் கணிதவியலாளரைத் தேடும்போது, இந்து மதக் கல்லூரியின் அப்போதைய கணித ஆசிரியர் திரு. டைலர் டைட்லர் அவர்களின் மாணவர் ராதாநாத் சிக்தரை கண்டறிந்தார். அப்போது ராதாநாத்தின் வயது 19. அதன் பின்பு ராதாநாத் சிக்தார் 1831-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாபெரும் முக்கோணக் கணக்கீட்டுக் குழுமத்தில் (Great Trigonometry Survey) இணைந்தார். அப்போது இவரது மாத ஊதியம் இந்திய ரூபாய் 30. இவரது புவி அளவியல் திறமையை அறிந்த குழுவினர் டேராடூன் அருகே உள்ள சிரோஜிக்கு இவரை அனுப்பினர். இவரது அணுகுமுறையானது வழக்கமான புவிப்பார்த்தச் செயல்முறைககளிலிருந்து (மாஸ்டரிங் முறை) மாறுபட்டு, சொந்த அறிவியல் கண்டுபிடிப்புக்களையும் உள்ளிடக்கிய புது வகையான அணுகுமுறையாக இருந்தது.
சிறப்பான செயல்பாட்டின் காரணமாக திரு.எவரெஸ்ட், ராநாதாத் சிக்தரை துணை கலெக்டராக ஜிடிஎஸ் பிரிவிற்கு மாற்றினார். 1843 ஆம் ஆண்டு திரு. எவரெஸ்ட் பணி ஓய்வு பெற்றதையடுத்து ராதாநாத் சிக்தர் நிர்வாக இயக்குனர் ஆனார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ராதாநாத் சிக்தரை தலைமைக் கணித அதிகாரியாக கல்கத்தா மாநகருக்குப் பணி நியமனம் செய்யப்பட்டார். இவர் பாரமானியமுக்கத்தின் அளவீடுகளாக நடைமுறையிலிருந்தவற்றை மாற்றியமைக்கத் தன்னுடைய கண்டுபிடிப்புக்களைப் (உதாரணமாக, 32 டிகிரி பாரன்ஹீட் மாற்று கணக்கீடுச் சூத்திரம்) பயன்படுத்தினார்.

இவர் தலைமையில் டார்ஜிலிங் அருகே பனி மூடிய மலைகள் அளவிடும் பணி கேணல் வாஹ் கேட்டுக்கொண்டபடித் தொடங்கியது. ஆறு வெவ்வேறு கண்காணிப்பு அளவீடுகளின்படி இன்றைய எவரெஸ்ட் சிகரமே உலகின் உச்சம் என ராதாநாத் சிக்தரால் அன்று பரிந்துரை செய்யப்பட்டு, சில வருடங்களுக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பனி சிகரத்திற்குப் பெயரிடப்படும்போது உள்ளுர் பெயர் முன்னுரிமை வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆனால், கேணல் வாஹ் இதற்கு விதிவிலக்குக் கொடுத்தார். தன்னுடைய முன்னாள் தலைமை அதிகாரியாக இருந்த திரு. எவரெஸ்ட்டின் நினைவாக பெயரிடப்பட வேண்டும் என இராதானாத் சிக்தார் தெரிவித்தார். இதன் காரணமாக ராதாநாத் சிக்தாரின் பணி மற்றும் உழைப்பு அங்கீகரிக்கப்படவில்லை.

எவரெஸ்ட்டின் உயரத்தை முதன்முதலாக கணித்த இராதானாத் சிக்தார் மே 17 , 1870ல் தனது 57வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். ஏப்ரல் 10, 1802ல் சென்னையிலே தொடக்கப்பட்ட மாபெரும் முக்கோணமுறை நில அளவீடு திட்டத்தின் நினைவாக, இந்திய அஞ்சல் நிறுவனம், ஜூன் 27, 2004ல் சென்னையில் ஒரு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டது. இதில் இராதானாத் சிக்தார் படமும், நைன் சிங்கு (இவரும் நில அளவீட்டில் முன்னணியில் பங்களித்தவர்) படமும் இடம் பெற்றிருந்தன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
- முடி சூட்டும் விழா முடிந்தது.. மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியது.. ராகுல் காந்திமல்யுத்த வீரர் வீராங்கனைகள் கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்பாஜக […]
- செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது -முதல்வர் மு .க ஸ்டாலின்.மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. என […]
- பேப்பர் மற்றும் மை விலையை கட்டுப்படுத்த வேண்டும்- மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் தீர்மானம்கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் பேப்பர் மற்றும் மை விலையிணை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த […]
- புது நாடாளுமன்றம் திறக்கும் நாளில் நிலநடுக்கத்தால் குலுங்கிய தலைநகர் டெல்லிவரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், இன்று டெல்லி […]
- ரூ.75 நாணயம் கருப்பு நிறமாக இருப்பது ஏன்?இந்திய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு […]
- முதல் நாளே பிரச்சனை-புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகள் கைது
- உலகபட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 1000 பேருக்கு மதிய உணவுஉலகபட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 பேருக்கு மதிய உணவு […]
- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!..வெயில் படிப்படியாக குறையும்தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக […]
- மருத்துவகல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து-தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்மருத்துவக்கல்லூரிக்கான அங்கீராரம் ரத்து செய்யப்பட தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கே காரணம் என […]
- பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா ரத்து -ஏற்புடையதல்ல! – எஸ்.டி.பி.ஐ.மதுரையில் அரசு ஒதுக்கீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல! – […]
- 2023 ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவு..கோப்பையை வெல்லுமா சென்னை அணி?ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று இரவு மோதுகின்னறன. இன்றுடன் 2023 ஐபிஎல் […]
- மதுரையில் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்குமதுரை பாண்டிகோவில் பகுதியில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்கு- […]
- ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்ராஜபாளையம் ஜவகர் மைதானம் எதிரே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் – மரக்காணம் கள்ளச்சாராய […]
- இன்று இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் நினைவு நாள்பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் […]
- கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழாகலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு […]