ஈரோடு மாவட்டம் நம்பியூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
பனைமரத் தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார்,கண்ணன், தங்கமுத்து, முனீஸ்வரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் எர்ணவூர் நாராயணன் பேசியபோது இங்கு 200 பனைமர தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 89 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பனைமரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பனைமர தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டும் பொருளாதாரத்தில் முன்னிலைப்படுத்தும் வகையிலும் மாநிலம் முழுவதும் தொடர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஈரோடு மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய பனைமர தொழிலாளர்கள் தங்களது பெயர்களை வாரியத்தில் பதிவு செய்து வாரியம் மூலம் கிடைக்கும் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தமிழகம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகளவு பனைமரத் தொழிலாளர்கள் உள்ள மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அங்கு சிறப்பு கூட்டங்கள் நடத்தி வருகிறோம். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூபாய் 49 லட்சம் மதிப்பில் பனைமர தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று நம்பியூர் பகுதியில் உள்ள பனைமர தொழிலாளர்களுக்கு சுமார் 200 பேருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பனை நல வாரியத்தில் சுமார் ஒரு லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பது என உறுதி கொண்டுள்ளோம் மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இதற்கென சிறப்பு கவனம் செலுத்தி பனைமர தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்த பல்வேறு நலத்திட்டங்களை செய்ய உள்ளார் எனவும் கூறினார்.
கூட்டத்தில் வழக்கறிஞர் விநாயகமூர்த்தி, தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், ஆர்.கே.நகர் ராஜேஷ், பனைமர நல வாரிய நிர்வாகிகள் நாடார் சங்க நிர்வாகிகள் சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட செயலாளர் சங்கரகுமார் செய்து இருந்தார்.
- மதுரை அரசரடி நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு- பொதுமக்கள் அதிருப்திகுடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதை சரியாக பாராமரிக்க வேண்டும் மதுரை அரசரடி […]
- மஞ்சூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகம் மஞ்சூர் […]
- சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைதிருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமிகோயிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மதுரை […]
- தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டும் வன விலங்குகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை […]
- ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய திமுகவின் ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை […]
- முதுமலை பகுதியில் புதிய பாலம் கட்டும் பணியினை உடனே துவங்க கோரிக்கைமுதுமலை புலிகள் காப்பகம் அருகே பழங்குடியினர் மற்றும் வளர்ப்பு யானைகள் நடக்க உதவும் வகையில் புதிய […]
- வாடிப்பட்டியில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் […]
- வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம்வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றதுமதுரை வாடிப்பட்டி […]
- ராமேஷ்வரம் கடலில் வீசப்பட்ட தங்ககட்டிகளை தேடும் நீர்மூழ்கி வீரர்கள்இலங்கையிலிருந்து- ராமேஷ்வரம் வழியாக தங்ககட்டிகள் கடத்தி வந்து போலீசார் சுற்றி வளைத்ததால் கடலில் வீசியதாகவும் அதனை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 111: அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு […]
- ஜஸ்டின் பேத்தி நாயகியாக அறிமுகமாகும் அஞ்சி நடுங்கிடஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) நிறுவனம் தயாரிக்கும் ‘அஞ்சி நடுங்கிட’ எனும் புதிய […]
- ஆயிரம் ஆண்டு பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு..!விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிராமமாகக் கருதப்படும் எண்ணாயிரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. பொருள் (மு.வ): ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் […]