காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெளிநாட்டில் சிகிச்சைக்காக சென்றுள்ள சோனியாகாந்தி மற்றும் ராகுல் இருவரும் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கட்சி தலைவருக்கான தேர்தல் ஆக்டோபர் 17ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.கட்சி த லைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என ராகுல், சோனியா ஏற்கனவே அறிவித்த நிலையில் சசிதரூர் போட்டியிடவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு எதிராக ராஜஸ்தான் முதல்வர் அசோக்கொலாட்டை களமிறக்க சோனியா திட்டமிட்டுள்ளார்.