இந்தியாவில் கச்சாய் எண்ணெய் உற்பத்தி குறைவால் விலை உயரும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி சென்ற ஜூன் மாதத்தில் 1.71சதவீதம் ஆகக் குறைந்து 2.43 மில்லியன் டன்களாக உள்ளது. இதே சென்ற ஆண்டு ஜூன் மாதம் கச்சா எண்ணெய் உற்பத்தியானது 2.48 மில்லியன் டன்களாக இருந்தது. ஜூன் மாதத்திற்கான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் உற்பத்தி 1.62 மில்லியன் டன்களாக இருந்தது. இது கடந்த ஆண்டு ஜூன் மாத உற்பத்தியை விட 0.21சதவீதம் அதிகமாகும். ஆனால் இது மாதத்திற்கான இலக்கை விட 1.11சதவீதம் குறைவாக உள்ளது.
2022-23 நிதியாண்டுக்கான இலக்கு 30.84 மில்லியன் டன் அளவு உற்பத்தி செய்ய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. கடந்த மாதம் கச்சா எண்ணெய் உற்பத்தி 2.51 மில்லியன் டன் இலக்கை விட 3.01மூ குறைவாக இருந்தது. இறக்குமதி அதிகமாகச் சார்ந்திருப்பதைக் குறைக்க, உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா தனது ஆற்றல் தேவைகளில் 85சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்கிறது.
ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி மற்றும் உலகளாவிய மந்தநிலை போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை நிலையற்றதாக இருக்கும்போது கச்சா எண்ணெய் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மீதான ஒரு நிலைக்குழு, உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் மறுபரிசீலனை செய்யப் பரிந்துரைத்தது. இதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கூறியது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் புதிய ஆய்வு உரிமக் கொள்கையின் கீழ் எண்ணெய் வயல்களின் “மிகக் குறைந்த” பங்களிப்பு குறித்து குழு கவலையைத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஜூலை மாத்தில் ஓஎன்ஜிசி 1.63 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவை உற்பத்தி செய்துள்ளது. இது ஜூன் 2021 உற்பத்தியை விட 2.8சதவீதம் குறைவு. அதே நேரத்தில் ஆயில் இந்தியாவின் எரிவாயு உற்பத்தி 7.22சதவீதம் அதிகரித்து 246.75 மில்லியன் கன மீட்டராக உள்ளது.
- அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு -கே.எஸ்.அழகிரிநிதிநிலை அறிக்கையின்போது அதிமுக வெளி நடப்பு குறித்த கேள்விக்கு.அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு […]
- மதுரை செல்லம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி போராட்டம்மதுரை செல்லம்பட்டி அருகே.பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை […]
- ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழாமதுரை மாவட்டம் தங்களாச்சேரி கிராமத்தில் உள்ள நடுநிலைப்ள்ளியில் ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழா நடைபெற்றது. […]
- ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்ன? எடப்பாடி பழனிசாமிஇன்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெடில் அறிவிக்கப்பட்டரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை என எடப்பாடி […]
- சோழவந்தானில் பங்குனி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்புசோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ […]
- விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் நடத்திய கிரிக்கெட் போட்டிஇன்றைய இளைஞர்களை சீரழிக்கும் செல்போன், மது போதை இவைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் […]
- திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றிய மணமக்கள்..!கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் சிலம்பம் […]
- தஞ்சாவூரில் இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி..!தஞ்சாவூரில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாறாக இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் […]
- நெல்லையில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி..!நெல்லையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருநெல்வேலி மாநகர காவல் துறை, கோபாலசமுத்திரம் […]
- 8ம் வகுப்பு மாணவர் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சிராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் […]
- பேராபத்தை சந்திப்போம்-ரியல் எஸ்டேட் மாநாட்டில் சத்குரு பேச்சு!“குறைந்த நிலப்பரப்பும், அதிகப்படியான மக்கள் தொகையும் கொண்ட நம் நாட்டில் கடந்த காலங்களை போல் கட்டுமானங்கள் […]
- மதுரை மெட்ரோ திட்டம்- எஸ்எம்எஸ் அனுப்பிய தமிழக அரசுமதுரை மக்களுக்கு 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக […]
- அதானி பற்றி பேசினால் அது தேச துரோகமா.? மதுரை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி பேட்டி..மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே […]
- இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில்..
முதலிடம் பெற்றுத் திகழ்வது தமிழ்நாடுதான்..!இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான் என்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை […] - லைஃப்ஸ்டைல்உடற்பருமனும் அதனைக் குறைக்கும் வழிகளும்: