• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மழைக்காலம் முடியும் வரை இலவச உணவு!

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் உள்ள சுப்பிரமணிய தோட்டம் பகுதியில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய பின்னர் கோபாலபுரம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு…

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கார்த்திகை மாதம் பசலி மற்றும் திருக்கார்த்திகை உற்சவம்

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சிவபெருமான் பல்வேறு அவதாரமெடுத்து 64 திருவிளையாடல்கள் புரிந்த புராதானமான புண்ணிய ஸ்தலமாகும். இந்த திருக்கோயிலில் கார்த்திகை மாதம் பசலி – திருக்கார்த்திகை உற்சவம் வருகிற நவ.,14 ஆம் தேதிமுதல் துவங்கி நவ.,23 ஆம்…

பிரபல குணச்சித்திர நடிகை மருத்துவமனையில் சேர்ப்பு…

காதலுக்கு மரியாதை படத்தில் நடிகை ஷாலினியின் பாட்டி வேடத்தில் நடித்த, பிரபல மலையாள குணச்சித்திர நடிகை கேபிஏசி லலிதா உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கேரள உலகில் சிறந்த குணச்சித்திர நடிகையான கேபிஏசி லலிதா, இரண்டு முறை தேசிய விருது பெற்றவர்.…

கொரோனா பாதித்த குடும்பங்களுக்கு 50,000-உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து 500 நாட்களுக்கும் மேல் கடந்து விட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விதிகளின் படி உரிய இழப்பீட்டை வழங்கக் கோரி விஜய கோபால் என்பவர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தலைமை…

ஜீவாதார உரிமையை பறி கொடுக்கக் கூடாது – ஓபிஎஸ்

தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் அவர்களின் திருஉருவ சிலைக்கு அதிமுக சார்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்…

திருவாடானையில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் ஆலயத்தில் இன்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு முருகனுக்கு பால் குடம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது திருவாடானை அருள்மிகு சிநேகவல்லி தாயார் உடனாய ஆதிரத்தினேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முருகன் சன்னதியில் இன்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி…

இராமநாதபுரத்தில் தி.மு.க அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (09-11.2021)முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க படாமல் கேரளாவிடம் தமிழக உரிமையை விட்டுக் கொடுத்த திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அரண்மனையில் நடைபெற்றது. இன்று திமுக அரசை கண்டித்து மதுரை, தேனி,…

கால்வாயில் கவிழ்ந்த கார் .. உயிருக்கு போராடிய 5 பேரை துணிச்சலுடன் மீட்ட இளைஞர் – குவியும் பாராட்டுகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கால்வாயில் விழுந்த காரில் சிக்கிய 5 பேரை, துணிச்சலுடன் காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என சென்னை…

மலைகளின் இளவரசி கொடைக்கானலை விஞ்சி நிற்கும் வைகை அணையின் அழகு.

வைகை அணை நீர்த்தேக்கத்தில் தண்ணீரும் ,வானமும் ஒன்று போல் காட்சி அளிக்கிறது. மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் வைகை அணையில் வானம் மப்பும், மந்தாரமுமாக கொடைக்கானலை விஞ்சி நிற்கிறது. இதமான காற்று, இனிமையான துளிர் மழை,இது இன்று மதியம் ஒரு மணி நிலவரம்.…

கொரோனாவால் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.50,000 இழப்பீடு – தமிழக அரசு

தமிழ்நாட்டில் கொரோனாவால் 36,220 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனாவை அரசு பேரிடராக அறிவித்து. 500 நாட்களுக்கும் மேலாகியும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு…