• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

திருவாடானையில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் ஆலயத்தில் இன்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு முருகனுக்கு பால் குடம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது

திருவாடானை அருள்மிகு சிநேகவல்லி தாயார் உடனாய ஆதிரத்தினேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முருகன் சன்னதியில் இன்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் .

என்று பக்தர்கள் 20க்கும் மேற்பட்ட இவர்கள் கோவில் வளாகத்திற்குள் பால்குடம் எடுத்து சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அந்த பாலால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். இந்நிகழ்வில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் முருகப்பெருமானை வழிபட்டனர்.