• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

வைகை அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு. முல்லைப் பெரியாற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாகவும், முல்லைப் பெரியாற்றில் இருந்து வினாடிக்கு 2305 கனஅடி தண்ணீர் தமிழக பகுதிக்கு திறந்து விடப்பட்டுள்ளதாலும், 71அடி உயரமுள்ள…

உள்ளூர் பட்டாசு கடைகளில் விற்பனை சரிவு வியாபாரிகள் அதிர்ச்சி

தீபாவளித் திருநாளை புத்தாடை உடுத்தி, இனிப்பு பலகாரங்களை சுவைத்தும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்வது வழக்கம். இந்த ஆண்டு பட்டாசு விற்பனை உச்சநீதிமன்ற கட்டுப்பாடு காரணமாகவும் கிப்ட் பாக்ஸ் வருகை அதிகரிப்பாலும், பட்டாசுகளின் விலை ஏற்றத்தாலும் விற்பனை கடுமையாக சரிந்தது. இதனால் உள்ளூர்…

அமைச்சர் துரைமுருகன் காரை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட முயற்சி

முல்லைப் பெரியாறு அணையை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று ஆய்வு செய்தார். முன்னதாக அமைச்சர் காரை முற்றுகையிட முயற்சி நடந்தது. கடந்த 29-ம் தேதி முதல் முல்லைப் பெரியாறு அணையில் மொத்தமுள்ள 13 மதகுகளில், 8 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர்…

பெரியகுளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம்.

ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமான முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்கிடவும்,மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் சட்டரீதியாக பெற்று தரப்பட்ட உரிமையை நிலை நாட்டிடவும்,முல்லை பெரியாறு அணையில் அத்துமீறி நுழைந்த கேரள அமைச்சர்களை கண்டித்தும் திமுக…

பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் மும்மரம்

தீபத் திருநாளாம் தீபாவளி திருநாளை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி குறிப்பிட்ட நேரத்தில் பலரும் பின்பற்றி பட்டாசுகளை வெடித்தனர். என்றாலும் காற்று மாசால் டெல்லி சென்னை போன்ற பெருநகரங்கள் பாதிக்கப்பட்டது. அனைத்து இடங்களிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைத்து…

பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டி தருவதாக கூறி பள்ளம் மட்டும் தோண்டி கிடப்பில் போடபட்டுள்ள கட்டுமான வேலை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வேலப்பர் கோவில் பகுதியில் உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு அரசு சார்பில் பலவகையான நலதிட்ட உதவிகள் வழங்கபட்டு வருகிறது. இங்கு 31குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில்…

குப்பைகளை அகற்ற துப்புரவு பணியாளர்களுக்கு உதவிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

மாசி வீதிகள் தோறும் கிடந்த குப்பைகளை அகற்ற துப்புரவு பணியாளர்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உதவினர். தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை மட்டுமல்லாது மதுரையைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க…

காவல் ஆளிநர்களுக்கான சிறப்பு யோகாசன பயிற்சி

சேலம் மாநகர காவல் துறையின் சார்பாக சேலம் காவல் ஆளிநர்களுக்கான சிறப்பு யோகாசன பயிற்சியில் 250க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர். சேலம் மாநகர காவல்துறையின் வடக்கு சரகத்திற்கு உட்பட்ட சூரமங்கலம் அம்மாபேட்டை அஸ்தம்பட்டி காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கான சிறப்பு யோகாசன…

சேலத்தில் ஏரி உடைந்து குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது

சேலத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் டி. பெருமாபாளையம் பகுதியில் உள்ள காரைக்காடு ஏரியில் உடைப்பு ஏற்பட்டு அருகே உள்ள குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததில் இரண்டு வீடுகள் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தில்…

கனமழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு

சேலத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. சேலத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சூரிய உதயமின்றி கருமேகங்கள்…