கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் இன்று காலை டிஸ்சார்ஜ் ஆகிறார்.
கடந்த 15 ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதியானதால் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் முழுமையாக கொரோனாவிலிருந்து குணமடைந்து விட்டதாகவும் இன்று காலை 11மணிக்கு மருத்தவமனையிலிருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.