தே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருமான எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மக்களின் முதல்வர் மாண்புமிகு. கேப்டன் அவர்களுக்கும் மக்கள் தலைவி கழகப் பொருளாளர் திருமதி அண்ணியார் அவர்களுக்கும் ஈரோடு மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ஒன்றியப் பகுதி, பேரூர், வட்ட கழக நிர்வாகிகளை அறிவித்தமைக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவர் கேப்டன் அவர்களால் அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநகர் மாவட்டம் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.