தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் யூனியனுக்கு உட்பட்ட கே. துரைச்சாமிபுரம் பஞ்சாயத்து தலைவர் மல்லிகா தமிழக உள்ளாட்சி துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறப்படுவதாவது- தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் யூனியன் கே.துரைச்சாமிபுரம் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறேன். நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். பஞ்சாயத்து துணை தலைவராக அமுதா என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் ஜெ.ஜெ.எம். திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் பலமுறை முறைகேடு நடந்துள்ளது.பொதுமக்கள் பலர் என்னிடம் முறையிடுகின்றனர். இது சம்பந்தமாக அரசு அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் பலனில்லை. தற்போது பஞ்சாயத்து சிறப்பு கூட்டம் போட சொன்னார்கள். ஆனால் ஜெ.ஜெ.எம் திட்டத்தில் உள்ள முறைகேட்டிற்கு தீர்வு தெரியாமல் எதுவும் செய்ய இயலாது என கூறினேன். ஆனால் துணை தலைவர் மற்றும் பஞ்சாயத்து கிளார்க் ஆகியோர் என் அனுமதி இல்லாமல் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை வைத்து கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இவர்கள் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்னை நிர்வாகம் செய்ய விடாமல் இடையூறு செய்கின்றனர். எனவே மேற்படி இடையூறு செய்யும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இது சம்பந்தமாக பொதுமக்களை திரட்டி போராட தயாராக உள்ளேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து துரைச்சாமிபுரம் பஞ்சாயத்து தலைவரான மல்லிகா கூறியதாவது. கயத்தார் யூனியன் கே. துரைச்சாமிபுரம் பஞ்சாயத்திற்கு வர வேண்டிய நிதியானது தற்போது பல ஆண்டுகளாக அருகில் உள்ள கே. வெங்கடேஸ்வரபுரம் கிராம பஞ்சாயத்திற்கு சென்று விடுகிறது. கேட்டால் மக்கள் தொகை கணக்கீட்டின்படி நிதி வழங்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மக்கள் தொகை கணக்கீட்டின்படி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் கிராம பஞ்சாயத்தில் தான் அதிகளவில் உள்ளனர். ஆனால் நிதியோ தவறுதலாக மாறி செல்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக பஞ்சாயத்து நிர்வாகத்தை நடத்த முடியவில்லை.

இந்நிலையில் துணை தலைவர் மற்றும் கிளார்க் என்னை ஒதுக்கிவிட்டு தன்னிச்சையாக செயல்பட்டு எனை கேட்காமல் கூட்டம் நடத்துவது போல் நடத்தி தீர்மானம் நிறைவேற்றுவது மற்றும் ஜெ.ஜெ. எம். திட்டத்தில் மோசடி உள்ளிட்ட பல புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. எனவே அரசு முறையாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு கூறினார்.
- 3500 கிலோ மீட்டர் நடைபயணம்… காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி திட்டம்!!காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 3500 கிலோ மீட்டர் நடைபயணம் செல்ல திட்டமிட்ட நிலையில் இந்த […]
- வரும் 1-ம் தேதி முதல் உயர்கிறது டோல் கட்டணம்..!தமிழகத்தின் உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை ஆகிய சுங்கச்சாவடிகளில், வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக் […]
- ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை கோர்ட் முடிவு செய்துவிட முடியாது-கடம்பூர் ராஜூஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை கோர்ட் முடிவு செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் […]
- இபிஎஸ்ஸின் படைபலத்தை பார்த்து ஓபிஎஸ் பயந்துவிட்டார்இபிஎஸ்ஸின் படைபலத்தை பார்த்து ஓபிஎஸ் பயந்துவிட்டார் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா பேசியுள்ளார்.அதிமுக பொதுக்குழு […]
- மதுரை வந்த ஓபிஎஸூக்கு உற்சாக வரவேற்புஅதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு வந்த பின் மதுரை வருகை புரிந்த ஓபிஎஸ்க்கு […]
- நகை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் திடீர் திருப்பம் […]
- சர்வாதிகார போக்குடன் கூறும் அறிவுரைகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம் -அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்சர்வாதிகார போக்குடன் சிலர் கூறும் அறிவுரைகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என நிதி அமைச்சர்பழனிவேல் தியாகராஜன் […]
- ஏடிஎம் சேவைக் கட்டணம் உயர்வு..! இன்று முதல் அமல்இந்தியா முழுவதும் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான சேவை கட்டணம் உயர்த்துப்டு இன்று முதல் அமலுக்கு […]
- சுயநலமற்ற எவரும் ஓபிஎஸ் கருத்தை வரவேற்பார்கள்.. டிடிவி பளிச்..!!சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஓபிஎஸ் கருத்தை வரவேற்கவே செய்வார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். […]
- தமிழ்க்கடல் “நெல்லை கண்ணன்” காலமானார்..தமிழ்க்கடல் என்று பெரும்பாலும் அழைக்கப்பட்ட நெல்லை கண்ணன் தன் 77வது வயதில் காலமானார். தமிழ் இலக்கியப் […]
- ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றங்களை வைத்த இபிஎஸ் …பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வழங்கிய பின் சென்னையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் கூறியதாவது, […]
- திவால் ஆகும் நிலையில் இந்திய வங்கிகள்?இந்திய வங்கிகள் திவாலாகும் நிலை ஏற்படலாம் என பொருளாதார வல்லூநர்கள் எச்சரித்துள்ளனர்.இந்தியாவில் வட்டிவிகிதங்கள் உயர்வு மற்றும் […]
- போலி ஆவண பத்திரப்பதிவு..,
அதிரடி காட்டிய சிவகாசி சார்பதிவாளர்..!போலி ஆவணங்கள் வாயிலாக பத்திரப்பதிவுகள் நடந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று சிவகாசி சார்பதிவாளர் அறிவிப்பு […] - அண்ணன் ஓபிஎஸ்..இபிஎஸ் பரபரப்பு பேட்டிஅதிமுகவில் தற்போது எற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அண்ணன் ஓபிஎஸ் என இபிஎஸ் பேட்டி அளித்திருகிறார்.அதிமுக […]
- கேரளா சவாரி” செய்ய ரெடியா..???நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் டாக்சி புக்கிங் செய்யும் நிறுவனங்களின் செயலிகள் மக்களால் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. […]