அமைச்சர் சக்கரபாணி தனது குடும்பத்துடன் வந்து கள்ளிமந்தயத்தில் ஓட்டளித்தார்.
ஒட்டன்சத்திரம் தொகுதியின் திமுக வேட்பாளரும் உணவுத்துறை அமைச்சருமான அர.சக்கரபாணி தனது குடும்பத்தினருடன் கள்ளிமந்தயத்தில் உள்ள சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் முதல் ஆளாக வந்து,ஜனநாயக கடமையை ஆற்றினார்.

பின்பு அவர் கூறியதாவது:
தமிழகத்தில் திமுகவுக்கு ஆதரவு அலை வீசி வருகிறது. வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அனைவரும் வெயிலில் சிக்காமல் வந்து ஓட்டளிக்க வேண்டும். பல இடங்களில் நல்ல வாக்குப்பதிவு நடந்து வருகிறது. நம்பிக்கையோடு செயலாற்றுவோம். நல்லதே நடக்கும் என்றார்.




