• Fri. Mar 29th, 2024

ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை

Byமதி

Dec 12, 2021

சில சயங்களில் குழந்தைகள் பிறப்பு என்பது மகிழ்ச்சியான சம்பவம் என்பதைத் தாண்டி ஆச்சரியமான சம்பவமாகவும் மாறிவிடுகிறது. ஆஸ்பத்திரியை தவிர சில சமயங்களில் குழந்தைகள் ஆட்டோ, ரயில், விமானம் மட்டுமின்றி பேருந்திலும் பிரசவம் நடக்கிறது. அப்படித்தான் சமீபத்தில் தெலுங்கானாவில் ஓடும் பேருந்தில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது.

இந்த குழந்தைகளுக்கு ‘பிறந்தநாள்’ பரிசு ஒன்றை தெலுங்கானா போக்குவரத்து கழகம் வழங்கியுள்ளது.

கடந்த நவம்பர் 30 ஆம் தேதி அன்று நாகர்கர்னூல் டிப்போவிற்கு சொந்தமான தெலுங்கானா மாநில பேருந்தில் நிறைமாத கர்ப்பமாக இருந்த பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது பெத்தகோத்தப்பள்ளி கிராமத்தின் அருகே பிரசவ வலி ஏற்பட்டதால், ஓடும் பேருந்திலேயே பெண் குழந்தையை பிரசவித்துள்ளார். இந்த செய்தி சுற்று வட்டாரம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. அடுத்தாக டிசம்பர் 7 ஆம் தேதி அன்று சித்திபேட்டை அருகில் மதிய நேரத்தில், இதே போன்று தெலுங்கானா மாநில பேருந்தில் நிறைமாத கர்ப்பிணியாக பயணம் செய்த மற்றொரு பெண்ணிற்கு அந்த பேருந்திலேயே பிரவசமாகி பெண் குழந்தை பிறந்துள்ளது என்று தெலுங்கானா மாநில பேருந்து கழகத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் VC சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.

இந்த இனிப்பான செய்தியை VC சஜ்ஜனார் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “சமீபத்தில் ஓடும் தெலுங்கானா பேருந்துகளில் (TSRTC) பிறந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கு ‘பிறந்தநாள்’ பரிசு ஒன்றை தெலுங்கானா போக்குவரத்து கழகம் வழங்கியுள்ளது. இதன்படி பேருந்தில் பிறந்துள்ள இந்த 2 பெண் குழந்தைகளுக்கும், வாழ்நாள் பேருந்து பயண அனுமதிச்சீட்டுகள் இலவசம்” என்று ட்வீட் செய்துள்ளார். இந்த பதிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இதை பற்றிய அடுத்தடுத்த ட்வீட்களில், இந்த இரண்டு பெண்களும் அந்தந்த இடங்களுக்குச் செல்லும் போது எதிர்பாராத விதமாக அவர்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா போக்குவரத்து கழக குழு உறுப்பினர்கள் மற்றும் சக பயணிகள் இந்த பெண்களுக்கு நல்லபடியாக பிரசவமாவதற்கு உதவினர் என்று துணைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு சுகாதார துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அந்த இரண்டு தாய்மார்களையும், பெண் குழந்தைகளையும் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தேவையான சிகிச்சைகளை அளித்துள்ளனர். தற்போது இரு தாய்மார்களும், குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்றும் தொடர்ச்சியான ட்வீட்களில் சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *