மதிமுகவில் அவைத்தலைவராக இருக்கும் துரைசாமி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மதிமுக அவைத்தலைவர் துரைசாமி மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என கூறியதால் மதிமுக அவைத்தலைவர் பதவி உட்பட கட்சியில் இருந்து திருப்பூர் துரைசாமியை நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், தனது வீட்டில் போட்டி பொதுக்குழு நடத்தவில்லை என விளக்கமளித்துள்ள துரைசாமி, திமுக உட்பட வேறு கட்சியில் கட்டாயம் இணைய மாட்டேன். அரசியல் பொதுவாழ்வில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன் என்று அறிவித்துள்ளார்.