நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு குந்தா தி.மு.க சார்பாக 70 நபர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் சத்தியவாணி தலைமையில் குந்தா கிளை செயலாலர் நாதன் வரவேற்புரை வழங்கினார். ஒன்றிய பிரதிநிதி சாஜ் வாழ்த்துரை வழங்கினார். லூயிஸ் நன்றி உரை வழங்க விழாவில் சிறப்பு விருந்தினர் மாவட்ட துனை இளைஞரணி அமைப்பாளர் T.K.S பாபு கட்சி கொடியை ஏற்றிவைத்து நலதிட்டங்களை வளங்கியதோடு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு பேனா பென்சில் இனிப்புகள் வழங்கினார்.மேலும் கொட்றகண்டி முதியோர் இல்லத்தில் மதிய உணவு வளங்கப்பட்டது.இதில் பேரூராட்சி செயலாலர் சதிஸ்குமார் ,சுகு மாடகன்ணு,சண்முகம், சத்திய நாராயணன் மற்றும் குந்தா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.