தவறிவிட்ட நகையை மீட்டு தரக்கோரி பெண் புகார்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் கெளஹர்! தன் மகளுடன் நகைக்கடை பஜார் பகுதிக்கு சென்ற இவர், சாந்தி நகைக்கடை முன்பு, இரண்டரை பவுன் நகை இருந்த தனது கைப்பையை தவற விட்டுள்ளார்! கடைக்குள் சென்று நகை வாங்கிய பின்,…
ராஜேந்திர பாலாஜி விரைவில் கைது: தேனியில் அமைச்சர் நாசர் தகவல்
“முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைவில் கைது செய்யப்படுவார்” என, தேனியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறினார். தேனி மாவட்டத்தில் நேற்று (டிச.29) காலை 9 மணிக்கு தேனி உழவர் சந்தை ஆவின் பாலகத்தில் நெய், பால்கோவா உள்ளிட்ட உணவுப் பொருட்கள்…
சுங்கச்சாவடியை அகற்றகோரும் கோவை மக்களவை உறுப்பினர் நடராஜன்
திருப்பூர் தாராபுரம் சாலையில் விதிமீறி அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை சுங்கச் சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரியிடம் நேரில் வலியுறுத்தி உள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி – திருப்பூர்…
ஆண்டிபட்டியில் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை. கும்பலை சேர்ந்த இருவர் கைது. போலீசார் விசாரணை.
ஆண்டிபட்டி பகுதியில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கும்பலை சேர்ந்த இருவர் போலீசில் சிக்கினார். ஆண்டிபட்டி டி.வி.ரெங்கனாதபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (26). இவர் மதுரையை சேர்ந்த தனது நண்பர்கள் மணி, வசந்த் ஆகியோருடன் வீட்டருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். ஆண்டிபட்டி…
ஜார்க்கண்டில் டூவீலருக்கு மட்டும் பெட்ரோல் விலை ரூ.25 குறைப்பு
ஜார்க்கண்டில் ஜன.,26 முதல் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட்…
நான் சாமியாரே இல்லை அன்னபூரணி அந்தர் பல்டி
ஆன்மிகப் பணி செய்ய வந்த என்னைப் பற்றி அவதூறு பரப்பிக் கொண்டிருகிறார்கள் என்று பக்தர்களுக்கு அருள்வாக்கு தருபவராக அறியப்படும் அன்னபூரணி பேட்டிளித்துள்ளார். சில தினங்களாகவே ”அன்னபூரணி அரசு அம்மா” என்ற பெயர் ஊடகங்களிலும் பொதுவெளிகளிலும் பரபரப்பாக பவனி வந்துகொண்டிருக்கிறது. அந்த பரபரப்புக்குச்…
ஒமைக்ரான் அறிகுறிகள் என்ன? மீண்டு வந்தவர் விளக்கம்
சளி, காய்ச்சல் மட்டுமே மூன்று நாட்களுக்கு இருந்ததாகவும் தீவிர அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் ஒமைக்ரான் தொற்றிலிருந்து மீண்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது 45 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேர் மட்டும் சிகிச்சைப்…
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு நிதியுதவி பெறும் சமாரியா தூய யோவான் டயோசீசன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 2 பயிலும் மாணவிகளுக்கு தலைமையாசிரியர்…
சீர் செய்வதைக் குறைக்க வேண்டும்! – அமைச்சர் வேண்டுகோள்
”திருமணத்தின்போது பெண்களுக்கு சீர் செய்வதைக் குறைக்க வேண்டும்” என்று அமைச்சர் பி.கீதா ஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை கே.கே.நகரில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் தென்மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை அமைச்சர்கள் கீதா ஜீவன், மூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி…
செங்கோட்டை நகர்ப்பகுதியில்.., நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டல்..!
செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ரூ.1 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிக்கு இன்று அடிக்கல் நடப்பட்டது. தென்காசி மாவட்டம், செங்கோட்டை…