மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு
சேலம் எருமாபாளையம் அருகே டாஸ்மாக் கடையில் மது வாங்கிய கூலித் தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு. சேலம் களரம்பட்டி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் அங்கப்பன் கூலி வேலை செய்து வருகிறார். தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை என்பதால் வீட்டிலேயே…
சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வு
சென்னை கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில்…
மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 11 சவரன் தங்க சங்கிலியை ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்து சென்றனர் இது குறித்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு…
கன்னியாகுமரியில் அடிப்படை வசதியின்றி சுற்றுலா பயணிகள் தவிப்பு
உலக சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிவது வழக்கம். இருப்பினும் கொரோனா ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இருப்பினும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும்…
வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: தரை பாலங்களில் போக்குவரத்து நிறுத்தம்
வருஷநாடு மற்றும் மூலவைகை ஆற்றுப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 66.83 அடியாக உள்ளது.…
ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
தீபாவளியையொட்டி தொடா்ந்து விடுமுறை வந்ததால் ராமேசுவரத்துக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது. இங்குள்ள ராமநாதசுவாமி கோயில் தீா்த்தக் கிணறுகளில் பக்தா்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். தனுஷ்கோடி மற்றும் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடத்துக்கு சுற்றுலாப்…
அண்ணன், தம்பி மீது தாக்குதல்: ஒருவா் கைது
திருப்பாலைக்குடி அருகே அண்ணன், தம்பியை பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். பழங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் அருண்பாண்டின். இவரும், இவரது இளைய சகோதரா் அலெக்ஸ் பாண்டியனும் வளமாவூா் விலக்கு சாலையில் நின்று கொண்டிருந்தனா். அப்போது அங்கு…
தமிழகத்தில் விடியவிடிய பெய்த கனமழை
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. விடியவிடிய பெய்த மழை காரணமாக சாலைகள், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்ட உள்ளதால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மிகைநீர் இன்று நண்பகல் வெளியேற்றப்பட உள்ளதால் கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர்,பர்மா காலனி,…
103 அடியை எட்டிய பவானிசாகர் அணை – மகிழ்ச்சியில் விவசாயிகள்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 103 அடியை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் 105 அடி…








