• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

மயிலாடுதுறை

  • Home
  • புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் அடிக்கல் நாட்டு விழா

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் ரூ.114.48 கோடியில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் மார்ச் மாதம் 2020-ஆம் ஆண்டு…

மயிலாடுதுறையில் 25-வது பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த 82 வயது முதியவர்..!

மயிலாடுதுறையில் 25-வது பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த 82 வயது உடைய முதியவரை பல்கலைக்கழகத் துணைவேந்தர் சால்வை அணிவித்துப் பாராட்டியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 82 வயதான குருமூர்த்தி. இவர் பாலிடெக்னிக் ஆசிரியராகப் பணியாற்றி…

சிறப்பு குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்!

மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் அன்பகம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி இயங்கி வருகிறது. இதில் மனவளர்ச்சி குன்றியவர்கள், ஆதரவற்றவர்கள் ஆகியோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தனது மகளுடன் அன்பகம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு சென்று…

மயிலாடுதுறையில் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்..!

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக (ம)…

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பவள ஆண்டின் 5-வது மாத விழா..!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பவள ஆண்டின் 5-வது மாத விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று கல்லூரி மாணவிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி அருளாசி கூறினார். மயிலாடுதுறை தருமபுரம்…

சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்க முன்மாதிரியாகத் திகழும் கலெக்டர்..!

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் திங்கள்கிழமை ஒருநாள் மட்டுமாவது அரசு அதிகாரிகள் வாகனங்களை பயன்படுத்தாமல் சைக்கிளிலோ, நடந்தோ அல்லது பொதுப் பேருந்திலோ அலுவலகம் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், மாவட்டக் கலெக்டர் ஒருவர் பேருந்தில் சென்று அனைவருக்கும் முன்மாதிரியாக…

மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை ஆய்வு செய்த அமைச்சர் குழு

மயிலாடுதுறையில் கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் எருக்கட்டாஞ்சேரி என்ற இடத்தில் நீரில்…

கருணை கொலை செய்து விடுங்கள் – கண்ணீருடன் ஆட்சியரிடம் மனு கொடுத்த மூதாட்டி!..

மயிலாடுதுறை மாவட்டம் வாணாதிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் 90 வயது மூதாட்டி தாவூத் பீவி. இவருக்கு 2 மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். கணவரை இழந்த இவர், தனது மகன்கள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இளைய மகன் அசரப் அலி வெளிநாடு…

மணல் கொள்ளையர் மீது குண்டர் சட்டம் பாயும் – காவல்துறை எச்சரிக்கை!..

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்வது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…