சோழவந்தான் ரயில்வே மேம்பால பகுதியில் உள்ள மண் குவியல்கள் அகற்றம் பேரூராட்சி நடவடிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பால பகுதியில் மன் குவியல்கள் குவிந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேம்பாலத்தில் விபத்து…
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம்..,
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மதுரை தவெக புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரியில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. தமிழக வெற்றிக்கழக மதுரை புறநகர் மாவட்டத்…
சோழவந்தானில் உதயநிதியின் கைதை கண்டித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல்..,
தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குறித்து அவதூறு பேசியதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பஸ் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சோழவந்தான் மாரியம்மன்…
அலங்காநல்லூரில் உதயநிதியை கண்டித்து கருப்பையா எம்எல்ஏ தலைமையில் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்களை அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா தலைமையில் மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,…
தவெக ஆர்பாட்டத்திற்கு அரசு அலுவலகத்தில் இருந்து மின்சாரம் திருட்டு..,
மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தொகுதியான மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழக வெற்றி கழகம் – கட்சியினர் நடத்திய ஆர்பாட்டத்திற்காக அரசு அலுவலக வளாகத்தில் இருந்து மின்சாரம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மதுரையில் தமிழக வெற்றி…
வாடிப்பட்டியில் தி.மு.க.வினர் மறியல் போராட்டம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது கண்டித்து முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ் தலைமை யில் அவைத்தலைவர் திரவியம் பேரூர் துணை செயலாளர் கண்ணன்,முன்னாள் கவுன்சிலர் பாலசுப்ரமணியன் மற்றும்…
கட்டுப்பாட்டை இழந்த கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதி தீபிடித்து எரிந்த சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி சுங்கச்சாவடி பகுதியில் மதுரையிலிருந்து உசிலம்பட்டி நோக்கி வந்த கார், சுங்கச்சாவடி முன்பு இருந்த வேகத்தடையின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த இருசக்கர வாகனம் மற்றும் நின்றிருந்த இருசக்கர வாகனம் என 2 இருசக்கர…
தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்பாரா அல்லது மக்களுக்கு கடன் அளவை சுட்டிக்காட்டி பட்டை நாமம் போடுவாரா-ஆர்.பி. உதயகுமார்…,
நாளைய தினம் தவெ.க அரசின் விஜய் தலைமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் முத்து முத்தாக அறிவிப்பு வெளிவருமா அல்லது எப்போதும் போல பஞ்ச் டயலாக் பேசி தமிழ்நாட்டு மக்களை பஞ்சராக்கப் போகிறதா என்பதுதான் இப்போதைய விவாதமாக இருக்கிறது…
மதுரையில் திரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள்..,
தமிழ் சினிமா உலகின் பிரபல நடிகையான திரிஷா தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நிலையில் அரசியலுக்கு வருவாரா ? என்ற பல்வேறு கேள்விகளும் இருந்துவருகிறது. திரிஷாவும் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தான் முதலமைச்சராக விரும்புவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் மதுரையில்…
ஒரே நாளில் அடுத்தடுத்து விபத்தில் ஆறு பேர் பலி..!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவர் யார் என போலீசார் எந்த ஊரை…








