• Thu. Apr 25th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 509:

குறள் 509:

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபிதேறுக தேறும் பொருள்.பொருள் (மு.வ):யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

குறள் 508:

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும் பொருள் (மு.வ): மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

குறள் 508:

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும்பொருள் (மு.வ): மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

குறள் 507:

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்பேதைமை எல்லாந் தரும். பொருள் (மு.வ): அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.

குறள் 506:

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்பற்றிலர் நாணார் பழி. பொருள் (மு.வ): சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.

குறள் 505:

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல் பொருள் (மு.வ): மக்களுடைய குணங்களாலாகிய பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

குறள் 504:

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல்.பொருள் (மு.வ):ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

குறள் 503

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு பொருள் (மு.வ): அரிய நூல்களைக்‌ கற்றுத்‌ தேர்ந்து குற்றம்‌ அற்றவரிடத்திலும்‌ ஆராய்ந்து பார்க்குமிடத்தில்‌ அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்‌.

குறள் 503:

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு.பொருள் (மு.வ):அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

குறள் 502:

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாணுடையான் சுட்டே தெளிவு பொருள் (மு.வ): நல்ல குடியில்‌ பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப்‌ பழியான செயல்களைச்‌ செய்ய அஞ்சுகின்ற நாணம்‌ உடையவனையே நம்பித்‌ தெளிய வேண்டும்‌.