• Tue. Apr 16th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 514

குறள் 514

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர் பொருள் (மு.வ): எவ்வகையால்‌ ஆராய்ந்து தெளிந்த பிறகும்‌ செயலை மேற்கொண்டு செய்யும்போது அச்‌ செயல்வகையால்‌ வேறுபடும்‌ மக்கள்‌ உலகத்தில்‌ உண்டு.

குறள் 513

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு பொருள் (மு.வ): அன்பு, அறிவு, ஐயமில்லாமல்‌ தெளியும்‌ ஆற்றல்‌, அவா இல்லாமை ஆகிய இந்‌ நான்கு பண்புகளையும்‌ நிலையாக உடையவனைத்‌ தெளியலாம்‌.

குறள் 512

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை பொருள் (மு.வ): பொருள்‌ வரும்‌ வழிகளைப்‌ பெருகச்‌ செய்து, அவற்றால்‌ வளத்தை உண்டாக்கி, வரும்‌ இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல்‌ செய்யவேண்டும்‌.

குறள் 511:

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும். பொருள் (மு.வ): நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

குறள் 509:

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபிதேறுக தேறும் பொருள்.பொருள் (மு.வ):யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

குறள் 508:

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும் பொருள் (மு.வ): மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

குறள் 508:

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும்பொருள் (மு.வ): மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

குறள் 507:

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்பேதைமை எல்லாந் தரும். பொருள் (மு.வ): அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.

குறள் 506:

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்பற்றிலர் நாணார் பழி. பொருள் (மு.வ): சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.

குறள் 505:

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல் பொருள் (மு.வ): மக்களுடைய குணங்களாலாகிய பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.