• Sat. Apr 27th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 501

குறள் 501

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்திறந்தெரிந்து தேறப் படும் பொருள் (மு.வ): அறம்‌, பொருள்‌, இன்பம்‌, உயிர்க்காக அஞ்சும்‌ அச்சம்‌ ஆகிய நான்கு வகையாலும்‌ ஆராயப்பட்ட பிறகே ஒருவன்‌ (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்‌) தெளியப்படுவான்‌.

குறள் 500

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சாவேலாள் முகத்த களிறு பொருள் ( மு.வ): வேல்‌ ஏந்திய வீரரைக்‌ கோத்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத யானையையும்‌, கால்‌ ஆழும்‌ சேற்று நிலத்தில்‌ அகப்பட்டபோது நரிகள்‌ கொன்றுவிடும்‌.

குறள் 499

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்உறைநிலத்தோடு ஒட்டல் அரிது பொருள்(மு.வ) அரணாகிய நன்மையும்‌ மற்றச்‌ சிறப்பும்‌ இல்லாதவராயினும்‌ பகைவர்‌ வாழ்கின்ற இடத்திற்குச்‌ சென்று அவரைத்‌ தாக்குதல்‌ அரிது.

குறள் 498

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும் பொருள் (மு.வ): சிறிய படை உடையவனுக்குத்‌ தக்கதாக உள்ள இடத்தில்‌ பொருந்தி நின்றால்‌, பெரிய படை உடையவன்‌ தன்‌ ஊக்கம்‌ அழிவான்‌.

குறள் 497

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமைஎண்ணி இடத்தால் செயின் பொருள் (மு.வ): (செய்யும்‌ வழிவகைகளைக்‌) குறைவில்லாமல்‌ எண்ணித்‌ தக்க இடத்தில்‌ பொருந்திச்‌ செய்தால்‌, அஞ்சாமை அல்லாமல்‌ வேறு துணை வேண்டியதில்லை.

குறள் 496

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்நாவாயும் ஓடா நிலத்து பொருள் (மு.வ): வலிய சக்கரங்களையுடைய பெரிய தேர்கள்‌ கடலில்‌ ஓடமுடியாது; கடலில்‌ ஓடுகின்ற கப்பல்களும்‌ நிலத்தில்‌ ஓடமுடியாது.

குறள் 495

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்நீங்கின் அதனைப் பிற பொருள் (மு.வ): ஆழமுள்ள நீரில்‌ முதலை மற்ற உயிர்களை வெல்லும்‌; ஆனால்‌ நீரிலிருந்து நீங்கி வந்தால்‌ அந்த முதலையையும்‌ மற்ற உயிர்கள்‌ வென்று விடும்‌.

குறள் 494:

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்துதுன்னியார் துன்னிச் செயின். பொருள் (மு.வ): தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

குறள் 493

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின் பொருள் (மு.வ): தக்க இடத்தை அறிந்து தம்மைக்‌ காத்துக்கொண்டு பகைவரிடத்திற்‌ சென்று தம்‌ செயலைச்‌ செய்தால்‌, வலிமை இல்லாதவரும்‌ வலிமை உடையவராய்‌ வெல்வர்‌.

குறள் 493:

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின் பொருள் (மு.வ): தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக்கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவரும் வலிமை உடையவராய் வெல்வர்.