• Tue. Apr 30th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 533

குறள் 533

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்துஎப்பால்நூ லோர்க்கும் துணிவு பொருள் (மு.வ): மறதியால்‌ சோர்ந்து நடப்பவர்க்குப்‌ புகழுடன்‌ வாழும்‌ தன்மையில்லை; அஃது உலகத்தில்‌ எப்படிப்பட்ட நூலோர்க்கும்‌ ஒப்பமுடிந்த முடிபாகும்‌.

குறள் 532

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்ச நிரப்புக்கொன் றாங்கு பொருள் (மு.வ): நாள்தோறும்‌ விடாமல்‌ வரும்‌ வறுமை அறிவைக்‌ கொல்வதுபோல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி கொன்றுவிடும்‌.

குறள் 531

இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு பொருள் (மு.வ): பெரிய உவகையால்‌ மகிழ்ந்திருக்கும்போது மறதியால்‌ வரும்‌ சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம்‌ வருவதைவிடத்‌ தீமையானதாகும்‌.

குறள் 530

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல் பொருள் (மு .வ): தன்னிடமிருந்து பிரிந்து சென்று ஒரு காரணம்பற்றித்‌ திரும்பி வந்தவனை, அரசன்‌, அவன்‌ நாடிய உதவியைச்‌ செய்து ஆராய்ந்து உறவு கொள்ளவேண்டும்‌.

குறள் 529

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்காரணம் இன்றி வரும் பொருள் (மு.வ): முன்‌ சுற்றத்தாராக இருந்து பின்‌ ஒரு காரணத்தால்‌ பிரிந்தவரின்‌ உறவு, அவ்வாறு அவர்‌ பொருந்தாமலிருந்த காரணம்‌ நீங்கியபின்‌ தானே வந்து சேரும்‌.

குறள் 528

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்அதுநோக்கி வாழ்வார் பலர் பொருள் (மு.வ): அரசன் எல்லாரையும் பொதுவாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால் அதை விரும்பிச்‌ சுற்றமாக வாழ்கின்றவர்‌ பலர்‌ ஆவர்‌.

குறள் 527:

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள. பொருள் (மு.வ): காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

குறள் 526:

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத்து இல். பொருள் (மு.வ): பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.

குறள் 525:

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தால் சுற்றப் படும். பொருள் (மு.வ):பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.

குறள் 524:

விஷாசுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன். பொருள் (மு.வ): தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.