• Sat. Apr 20th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 591:

குறள் 591:

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்உடையது உடையரோ மற்று. பொருள் (மு.வ): ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ

குறள் 590

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை பொருள் (மு.வ): ஒற்றனிடத்தில்‌ செய்யும்‌ சிறப்பைப்‌ பிறர்‌ அறியுமாறு செய்யக்கூடாது; செய்தால்‌ மறைப்பொருளைத்‌ தானே வெளிப்படுத்தியவன்‌ ஆவான்‌.

குறள் 589

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்சொற்றொக்க தேறப் படும். பொருள் (மு.வ): ஓர்‌ ஒற்றனை மற்றோர்‌ ஒற்றன்‌ அறியாதபடி ஆளவேண்டும்‌; அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர்‌ மூவரின்‌ சொல்‌ ஒத்திருந்தால்‌ அவை உண்மை எனத்‌ தெளியப்படும்‌.

குறள் 587:

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவைஐயப்பாடு இல்லதே ஒற்று. பொருள் (மு.வ): மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.

குறள் 586

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்துஎன்செயினும் சோர்விலது ஒற்று பொருள் (மு.வ): துறந்தவரின்‌ வடிவத்தை உடையவராய்‌, அரிய இடங்களிலெல்லாம்‌ சென்று ஆராய்ந்து, (ஐயுற்றவர்‌) என்ன செய்தாலும்‌ சோர்ந்துவிடாதவரே ஒற்றர்‌ ஆவார்‌.

குறள் 584

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்குஅனைவரையும் ஆராய்வது ஒற்று பொருள் (மு.வ): தம்முடைய தொழிலைச்‌ செய்கின்றவர்‌, தம்‌ சுற்றத்தார்‌, தம்‌ பகைவர்‌ என்று கூறப்படும்‌ எல்லாரையும்‌ ஆராய்வதே ஒற்றரின்‌ தொழிலாகும்‌.

குறள் 583

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்கொற்றங் கொளக்கிடந்தது இல் பொருள் (மு.வ): ஒற்றரால்‌ (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின்‌ பயனை ஆராய்ந்துணராத அரசன்‌ வெற்றி பெறத்தக்க வழிவேறு இல்லை.

குறள் 582:

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். பொருள் (மு.வ): எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

குறள் 581:

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்தெற்றென்க மன்னவன் கண். பொருள் (மு.வ): ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

குறள் 580:

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். பொருள் (மு.வ): எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.