அறந்தாங்கி அருகே உள்ள குறிச்சிகுளம் முத்துமாரியம்மன் கோவிலில், குடியரசு தினத்தை முன்னிட்டு, 501 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது! உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், கொரொனா தொற்று முழுமையாக நீங்க வேண்டியும் திருவிளக்கு பூஜையில் பெண்கள் ஈடுபட்டனர்.
முன்னதாக கோயில் வளாகத்தில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு அம்பாளுக்கு தீபாரதனை காட்டப்பட்டது!
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அப்பகுதியில் உள்ள ஆத்மநாதசுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்தை சேர்ந்த வாதவூரார சமூக சேவை சங்க இளைஞர்கள் செய்திருந்தனர்.