• Sun. Oct 1st, 2023

Month: February 2022

  • Home
  • பெல்ஜியத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு இதய வடிவ சாக்லேட் விற்பனை..

பெல்ஜியத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு இதய வடிவ சாக்லேட் விற்பனை..

உலகம் முழுவதும் காதலர் தினத்தைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். காதலை வெளிப்படுத்தவும், காதலர்கள் அன்பை பரிமாறவும் தயாராகி வருகின்றனர். உலகம் முழுவதும் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் முக்கிய நாள்களில் காதலர் தினமும் முக்கியமானது. இதையொட்டி, உலக அளவில் பூக்கள் வர்த்தகத்தில்…

மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (12.02.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

டாடா சன்ஸ் நிறுவன தலைவராக என். சந்திசேகரனின் பதவிக்காலம் நீட்டிப்பு..

டாடா குழு நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவன தலைவராக கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த என். சந்திசேகரன் (58) நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, 2வது முறையாக சந்திரசேகரனின் பதவிக்காலத்தை நீட்டித்து டாடா குழுமம் மீண்டும்…

படித்ததில் பிடித்தது

• தீய சொற்களை தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம்,ஒழுக்கம் உடையார்க்குப் பொருந்தாததாகும். • நல்லதே நடக்கும் என்ற உறுதியுடன் இருப்பவர்கள்இறைவனின் மகத்தான சக்தி பெற்று வளம் பெறுவார். • உண்மையிலேயே சக்தி குறைந்து விட்டோமோ என்ற உணர்வே தனி மனிதனையும்…

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்.. முதல்வர் ஆலோசனை..

தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.…

குறள் 118:

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்கோடாமை சான்றோர்க் கணி.பொருள் (மு.வ):முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

வாய் கூசாமல் பொய் பேசுபவர் அண்ணாமலை – சாட்டையை சுழற்றிய சவுக்கு

பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து அதன் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பொய்யான தகவல்களை அளித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் பேட்டி அளித்துள்ளார். ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் பேட்டியின் போது மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கூறியதாவது:-செய்தியாளர்:…

சின்னம் சின்னதா இருக்கு… ரகளையில் நாம் தமிழர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையல், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியினர் ‘கரும்ப விவசாயி ‘ சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சி சின்னம்…

சொன்னீங்களே செஞ்சீங்களா .. அதிர்ச்சியில் உதயநிதி ஸ்டாலின்..!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகளூர் பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது சில பெண்கள், ‘பெண்களுக்கு மாதம் 1,000…

இது தான் லாஸ்ட் சான்ஸ் .. மல்லையாவுக்கு எச்சரிக்கை

பிப்ரவரி 24ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென கடன் ஏய்ப்பாளரான தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அவர் மீதான கடன் ஏய்ப்பு வழக்கை 2017 முதல் விசாரித்த உச்ச நீதிமன்றம், பலமுறை உத்தரவிட்டும் விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் லண்டன்…