• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: November 2021

  • Home
  • கட்சித் தலைமையின் முடிவுக்காக காத்திருக்கும் யோகி ஆதித்யநாத்

கட்சித் தலைமையின் முடிவுக்காக காத்திருக்கும் யோகி ஆதித்யநாத்

கட்சியின் தலைமை முடிவெடுத்தால், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல்…

அரசு மருத்துவமனையில் தீ – 11 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று காலையில் ஐசியு வார்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிகிச்சை பெற்று…

அமித்ஷா தலைமையில் தென் மண்டல முதலமைச்சர்கள் குழுக்கூட்டம்

வரும் 14-ந்தேதி ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மண்டல முதலமைச்சர்கள் குழுக்கூட்டம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களிடையே உள்ள சிக்கல்களை தீர்த்து வைப்பதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கும் மாநிலங்களுக்கு தேவையான ஆலோசனைகள் கூறுவதே இம்மண்டலக்…

103 அடியை எட்டிய பவானிசாகர் அணை – மகிழ்ச்சியில் விவசாயிகள்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 103 அடியை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் 105 அடி…

தென்காசியில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் 100 க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் ஆலங்குளம்வடக்கு ஒன்றிய தேமுதிக அவைத் தலைவர் ரவிக்குமார், பரங்குன்றாபுரம் தேமுதிக…

தென்காசியில் நடைபெற்ற நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்காசி நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது நகராட்சி மற்றும் பேரூராட்சி களுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் 100%…

ஜியோ செல்போன் டவரில் மின்கசிவு காரணமாக தீ விபத்து

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காளவாய் பொட்டல் பகுதியில் ஜியோ நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. இந்த செல்போன் டவர் சுமார் 80 அடி உயரமானது. இதில் இன்று மாலை மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மின்சார…

பாஜகவினரை விமர்சித்ததாக கூறி ஆட்சியரிடம் பாஜகவினர் வாக்குவாதம்

கடந்த 2ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய 3 நகராட்சிகள், 12 பேரூராட்சிகளுக்கு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டார்.…

நவம்பர் கடைசியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…

நவம்பர் கடைசியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் வரும் 2022 – 2023ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கியது. வரும் 15ம் தேதிக்குள் தொழில்துறையினர் தங்களது ஆலோசனைகளை வழங்க நிதியமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா தொற்றுநோயைத்…

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு ரத்து – உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.…