• Fri. Apr 26th, 2024

தென்காசியில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் 100 க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் ஆலங்குளம்வடக்கு ஒன்றிய தேமுதிக அவைத் தலைவர் ரவிக்குமார், பரங்குன்றாபுரம் தேமுதிக கிளைச் செயலாளர் துரை, வாடியூர் 8 வது வார்டு உறுப்பினர் ரெபேக்காள் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய தேமுதிக மாணவரணி செயலாளர் சுரேஷ்,காவலாகுறிச்சி அமமுக கிளைச் செயலாளர் முத்துகுமார், மற்றும் முருகேசன் பாரதிய ஜனதா கட்சி கடங்கநேரி ராஜ், புதிய தமிழகம் காசிராஜா, ஜெயக்குமார், அமல்ராஜ், கணேசன், மக்கள் நீதி மையம் காவலா குறிச்சி கிளை செயலாளர் வினில்
மருதுபுரம் புதூர் கணேசன், சந்துரு, சுமன் ஆகியோர் உட்பட 100 க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தார்.

நிகழ்ச்சியின்போது பாப்பாக்குடி ஒன்றிய கழக செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் சுபாஸ் சந்திரபோஸ், அய்யம்பெருமாள், மாரித்துரை, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் P.S அண்ணாமலை, சேகர், கரிகாலன் ஹரிராஜ்,, மாணவரணி மாரியப்பன், அன்பழகன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *