

எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.
இந்தியளவில் டாப் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகச் சென்னை ஐஐடி இருக்கிறது. சென்னை ஐஐடியில் படித்த பலரும் இன்று தலைசிறந்த நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
இது அந்த நிறுவனம் எந்தளவுக்கு உயர்ந்த கல்வித் தரத்தைக் கொண்டுள்ளது என்பதையே காட்டுகிறது. பொதுவாக ஐஐடிக்களில் சேர வேண்டும் என்றால் JEE என்ற தேர்வை எழுத வேண்டும்.இதற்கிடையே சென்னை ஐஐடி நுழைவுத் தேர்வு இல்லாமல் அங்குச் சேரும் வாய்ப்பு அளிக்கிறது. இந்த கோர்ஸ் மட்டுமே இத்தகைய வாய்ப்பை அளிக்கிறது. அங்கே இணைய வழியில் நடத்தப்படும் டேட்டா சயின்ஸ் எனப்படும் தரவு அறிவியல் படிப்பிற்குத் தான் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. சென்னை ஐஐடியில் 2020ஆம் ஆண்டு முதல் இந்த இணைய வழி தரவு அறிவியல் படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய பேட்ச்களில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இதில் படித்து வருகின்றனர்.சர்வதேச அளவில் வளர்ந்து வரும் முக்கிய படிப்புகளில் ஒன்றாக இந்த டேட்டா சயின்ஸ் இருக்கிறது. வரும் காலத்தில் இந்த துறையிலேயே அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வரும் 2023க்குள் இந்த துறையில் உலகெங்கும் பல லட்சம் வேலைவாய்ப்புகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படிப்பில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது.
இந்த படிப்பிற்கான மாணவர்களைத் தேர்வு செய்யத் தனியாக ஒரு செயல்முறை பின்பற்றப்படுகிறது. 11ஆம் வகுப்பு படித்து முடித்தவர்களும் இதில் சேரலாம். இதன் மூலம் அவர்கள் +2க்கு செல்லும் முன்னரே ஐஐடியில் தங்கள் இடத்தை உறுதி செய்யலாம். அதேபோல +2 படிப்பவர்களும் கூட இதில் சேரலாம்.
மாணவர்களைத் தேர்வு செய்யும் இந்த செயல்முறை என்பது தகுதித் தேர்வில் இருந்து வேறுபட்டது. இதில் மாணவர்களுக்கு பல்வேறு பாடங்களில் சென்னை ஐஐடியில் 4 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். பின்னர், அவர்களுக்கு கற்றுத் தரப்பட்டதை வைத்துத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வைத் தேர்ச்சி பெற்றால் போதும் மாணவர்கள் இதில் சேரலாம்.இதில் ரேங்கிள் எல்லாம் எதுவும் இல்லை குறிப்பிட்ட கட்ஆப்பை தாண்டும் அனைவரும் இந்தப் படிப்பில் சேர முடியும். பள்ளியில் எந்த பாடத்திட்டத்தை எடுத்தவர்களும் கூட இதில் சேரலாம் என்பது இதில் இருக்கும் கூடுதல் சிறப்பாகும்இணைய வழியில் நடத்தப்படும் இந்த கோர்ஸில் பாடகங்கள் ஒவ்வொரு வாரமும் இணையத்தில் பதிவிடப்படும். தேர்வு எழுத மட்டும் நேரில் சென்று தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வை எழுத வேண்டும். ஓராண்டு சான்றிதழ் படிப்பு, ஈராண்டு பட்டயப் படிப்பு, இளநிலை என மூன்று வகையான படிப்புகள் உள்ளன. மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இதில் படிக்கலாம்.இந்த பாடத்தில் சேர விரும்பும் மாணவர்கள்https://onlinedegree.iitm.ac.inஎன்ற தளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். செப். 2023இல் தொடங்கும் பேட்சுக்கு வரும் ஜூன் 14ஆம் தேதி முதல் மேலே குறிப்பிடப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம்.
- சிறைவாசிகளுக்கு விடுதலைக்கு பின்னர் மிகப்பெரிய எதிர்காலங்கள் காத்திருக்கின்றனர் – பட்டிமன்றம் புகழ் ஞானசம்பந்தம் பேட்டி..,தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காந்தி ஜெயந்தி விழா மதுரை மத்திய … Read more
- மதுரையில் புதிய வர்த்தக சங்க நிர்வாகிகள் தேர்வு..!மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100வது ஆண்டு விழாவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மதுரையில் … Read more
- திருமங்கலத்தில் மாணவர்கள் பல்வேறு இடங்களில் தூய்மைப்பணி விழிப்புணர்வு..!திருமங்கலத்தில் பல்வேறு இடங்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ் மாணவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூய்மைப்பணிகளை மேற்கொண்டனர்திருமங்கலம் … Read more
- அக்.15ல் திருப்பரங்குன்றத்தில் நவராத்திரி தொடக்கம்..!திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வருகிற அக்டோபர் 15ஆம் தேதியன்று நவராத்திரி திருவிழா தொடங்க இருக்கிறது.மதுரை … Read more
- காதலனுடன் சென்றதை மறைக்க கடத்தல் நாடகம் ஆடிய கல்லூரி மாணவி..!காதலனுடன் ஜாலியாக ஊர் சுற்றியதை மறைக்க கடத்தல் நாடகம் ஆடிய கல்லூரி மாணவிக்கு போலீசார் அறிவுரை … Read more
- தொடர் விடுமுறை எதிரொலி – கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை எதிரொலியால், கொடைக்கானலில் சுற்றுலா … Read more
- சோழவந்தானில் காந்தி ஜெயந்தி விழா அனுசரிப்பு..!காந்திஜெயந்தியை முன்னிட்டு, சோழவந்தானில் காந்தி ஜெயந்தி விழா அனுசரிக்கப்பட்டது.சோழவந்தான் எம்.வி.எம். கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் … Read more
- காந்திஜெயந்தி – மகாத்மாகாந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை..!இன்று அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லியில் உள்ள மகாத்மாகாந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திரமோடி … Read more
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் 60 வயதைக் கடந்து 70ஐ நோக்கி வாழ்க்கையை நகர்த்தும் பழக்கமான தெரிந்த பெரியவரிடம், “நீங்க … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 262: தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர்,ஆடு மயிற் பீலியின் … Read more
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 539:இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. பொருள் (மு.வ): தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் … Read more
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்!சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் … Read more
- கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர்களுக்கு விபத்து..,குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி … Read more
- ஒன்றிய, கர்நாடகா அரசுகளை கண்டித்து, நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்…குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்.நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள … Read more
