ஃபோனோகிராஃப் மற்றும் ஒளிரும் மின்சார ஒளியைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசனின்.
பல்வேறு கண்டுபிடிப்புக்களின் சொந்தக்காரர், இவரின் பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஒன்றில் இருந்தேனும் பிரயோஜனம் அடையாத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்த 1300 கண்டுபிடிப்பிற்கு சொந்தக்காரரான தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கை வரலாற்றுப் பார்வையை இந்த கட்டுரையின் வாயிலாக நாம் பார்க்கலாம்.
1847 ம் ஆண்டு அமெரிக்காவில் ஓஹியோவில் உள்ள மிலன் எனும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சேமுவேல் எடிசன் ஒரு மர வியாபாரியாக இருந்தார். தாய் நான்சி எடிசன் ஒரு ஆசிரியையாக பணியாற்றினார். இவர்களது நடுத்தர குடும்பத்தில் 7வதும் கடைசியாகவும் பிறந்தவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன். தனது 8 வது வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட எடிசன் பள்ளியில் சோம்பேறியாகவும் படிப்பில் மந்தமாகவும் இருந்தார். பின் பள்ளியில் இருந்து நின்ற எடிசனுக்கு தாய் பள்ளிப்படிப்பை கற்பித்தார். இதோடு சேர்ந்து சமய நூல்கள், அறிவியலாளர்களின் புத்தகங்கள் என பல்வேறு புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் காட்டினார்.

தன் 12வது வயதில் எடிசன் தனது பெற்றோரை சம்மதிக்க வைத்து புகையிரத நிலையத்தில் பத்திரிகைகளை விற்பதை ஆரம்பித்தார். மேலும் அங்கே ஒரு சிறு அச்சு இயந்திரத்தை பயன்படுத்தி தனது சொந்த பத்திரிகையான கிரான்ட் ட்ரக் ஹெரால்டு (Grand Trunk Herald) ஐயும் அச்சிட்டு வெளியிட்டார். பின் புகையிரதத்தின் ஒரு பெட்டியில் தனது ஆய்வுகூடத்தை நிறுவி ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார். ஒருமுறை தான் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது புகையிரதம் திடீர் என்று நின்றதில் அவரது ஆய்வுகூடத்தில் இருந்த இரசாயணம் கீழே கொட்டியதால் அந்த புகையிரதம் தீப்பிடித்தது. இதனால் கோபம் அடைந்த புகையிரத அதிகாரி அவரது கன்னத்தில் ஓங்கி அடித்ததில் அவரது ஒருபக்க காதும் அவரது ஆயுள் வரை கேளாமலே போனது.


எடிசன் ஏன்? எவ்வாறு ? போன்ற துறு துறுவென கேள்விகேட்கும் குணம் தான் அவரை 1000த்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் ஆக்கியது. ஒறு முறை எடிசன் கோழி அடைகாத்து குஞ்சுபொறிப்பதை பார்த்து தானும் ஏறி இருந்து குஞ்சு பொறிக்க முயன்ற கதையையும் நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் இந்த யோசிக்கும் திறனே அவரை இன்றும் உலகம் போற்றற வைத்திருக்கிறது.

வறுமை காரணமாக தன் நண்பனின் உதவியுடன் Western Union Company ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். பின் எடிசன் 1870 இல் நியூஜெர்ஸியில் ஒரு நிறுவனத்தை நிறுவி சில இயந்திரவியலாளர்களையும் வேலைக்கு அமர்த்தினார். 1876 ம் ஆண்டு எடிசன் தனது ஆய்வுகூட நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து தொழிற்துறை ஆராய்ச்சி மையத்தை உருவாகினார். 1877ல் எடிசன் ஒலிகளை பதிவு செய்யும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்தார். அது ஒலிவரையி (Phonograph) என அழைக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பின் பின் அவரின் ஆராய்ச்சி ஒளியை நோக்கி இடம் பெயர்ந்தது. அதன் பின் மின் விளக்கு பற்றிய ஆய்வு ஆரம்பம் ஆனது.மின்வஇளக்கு பற்றிய ஆராயச்சிகள் இவருக்கு முதலில் தோல்விகளை கொடுத்தது. கடைசியாக 21 அக்டோபர் 1879ல் வெற்றிகரமாக செயல்ப்பட்டதனால் இவ்வுலகம் ஒளிமயமானது.
Phonography எப்படி காதுக்கு ஒலியை கொண்டு சேர்கிறதோ அவ்வாறே கண்ணனுக்கு ஒளியைகொண்டு சேர்க்க பேசும் படங்களை உருவாக்கும் திரைப்பட கருவியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார் எடிசன். 1888 ல் முதன் முதலாக திரைப்பட கருவியை உருவாக்கினார். அதன் பெயர் கைனிட்டோஸ்கோப் (Kinetoscope )என அழைக்கப்பட்டது. இதன் படம் சற்று மங்களாகவே தெரிந்தது. இதன் பின் இவரது கண்டுபிடிப்புகள் டைனமோ, X-ray Machine என்று இவரது கண்டுபிடிப்பின் பட்டியல் ஒன்றல்ல இரண்டல்ல நீண்டுகொண்டே சென்றது.

ஃபோனோகிராஃப் மற்றும் ஒளிரும் மின்சார ஒளியின் கண்டுபிடிப்புக்காக அவர் மிகவும் பிரபலமானவர் என்றாலும், எடிசன் மின்சார ஒளி மற்றும் சக்தி, தொலைபேசி மற்றும் தந்தி மற்றும் ஒலிப்பதிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 1,093 காப்புரிமைகளைப் பெற்றார். மென்லோ பார்க், NJல் உள்ள அவரது ஆய்வகத்தில் இயந்திர வல்லுநர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்த ஒரு சிந்தனையாளரை மிகவும் முறையான சிந்தனையாளரை மறைத்துவிட்டார் என்று பல்வேறு கருத்துக்கள் ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கப்படுகின்றன.
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை.!!புனே நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டியில் மதுரை வீரர் குண்டு எறிதலில் புதிய சாதனை […]
- மதுரை ஈச்சனேரி அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலிமதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த அரசு […]
- மதுரை வில்லாபுரத்தில் இடி, மின்னல் தாக்கி வீடுகள் சேதம்வில்லாபுரம் பகுதியில் அருகருகே இரண்டு வீட்டில் இடி, மின்னல் தாக்கி வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து […]
- எட்டு ஆண்டுகள் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி -விஜய்விஷ்வாதமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி […]
- பொது அறிவு வினா விடைகள்
- பாறைப் பட்டி கன்னிமார் கோயிலில் பூஜைமதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில், பங்குனி மாத சர்வஅமாவாசை […]
- பிரதமர் மோடியுடன் பானிபூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்..!இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜப்பான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில் உள்ள புத்தர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற […]
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]
- இன்று ஒளிமின் விளைவுகளை கண்டறிந்த இராபர்ட் மில்லிகன் பிறந்த தினம்ஒளிமின் விளைவு தொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்ட, நோபல் பரிசு வென்ற அமெரிக்க இயற்பியலறிஞர், இராபர்ட் மில்லிகன் […]
- “சண்டை காட்சிகளில் நடிப்பவர்களுக்குக் காப்பீடு வேண்டும்” – நடிகை சனம் ஷெட்டி கோரிக்கை!புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் திருமதி தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் […]
- விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ : இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் […]