• Fri. Feb 14th, 2025

குண்டு மழை பொழிவது யார்.. சிக்கி தவிக்கும் உக்ரைன்…

Byகாயத்ரி

Jul 27, 2022

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 150 நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரின் போது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் நாசமானது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள டொனெஸ்ட்க் நகரில் எரியும் தீ பந்துகள் போன்ற குண்டுகள் வீசப்பட்டுள்ளது.

இதுபோன்ற குண்டுகளை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய 2 நாடுகளும் வைத்திருப்பதால், தாக்குதலுக்கு யார் காரணம் என்பது சரிவர தெரியவில்லை. இது தொடர்பான 2 வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.