• Wed. Apr 24th, 2024

நினைவுகளை கொலுத்த ஏது நெருப்பு ?

ByA.Tamilselvan

Jul 1, 2022

தண்டவாளத்தை போல
தனிதனியாக இருப்பதே
தேவலாம்!
தோல்வியுற்ற காதல்
பயிற்றுவிக்கிறது ,
வெள்ளந்தி உள்ளத்தில்
சாதியின் கள்ளத்தனத்தை,
அவள் அள்ளித்த ,
அன்பு பரிசை ,
மதச்சாயத்தில் மூழ்கடித்தது .
நான் தந்த
நினைவு பொருட்களை
கண்முன்
கௌரவ தீயில்
கொழுத்துகிறது. .
பொசுக்குவதும் ,
புதைப்பதும் ,
உடலையும் ,
உபயோகமற்ற பொருளையும்.
ஒருகொருவர் ,
அள்ளித்தந்த காதலையும் ,
அன்பின் ஆரத்தழுவலில்
அளவிட முடியாத
உணர்வுகளில்
பூத்து குலுங்கிய
நினைவுகளை கொலுத்த
ஏது நெருப்பு ?
எண்ணங்களை புதைத்திட
எங்கே பாதாளம். ! ?

கவிஞர்.க.பாண்டிச்செல்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *