மின்காந்தக் கதிர்வீச்சு கண்டறிந்த, நோபல் பரிசு வென்ற சோவியத் ரஷ்யா இயற்பியலாளர் இகோர் எவ்ஜெனீவிச் டாம் நினைவு தினம் இன்று (ஏப்ரல்-12, 1971)
இகோர் எவ்ஜெனீவிச் டாம் (Igor Yevgenyevich Tamm) ஜூலை 08, 1895ல் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் பிறந்தார். 1914ல் முதலாம் உலகப் போர் வெடித்தபோது, அவர் தன்னார்வ கள மருத்துவராக இராணுவத்தில் சேர்ந்தார். 1917 ஆம் ஆண்டில் அவர் புரட்சிகர இயக்கத்தில் சேர்ந்தார். அவர் மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்திற்குத் திரும்பி 1918ல் இயற்பியலில் பட்டப் படிப்பை முடித்தார். கல்வி நிறுவனங்களில் ஆசிரியப் பணியைத் தொடங்கியதோடு, தனது உயர் கல்வியையும் தொடர்ந்தார். முதலில் ஆசிரியர் உதவியாளர், அதைத் தொடர்ந்து ஆசிரியர், விரிவுரையாளர், பேராசிரியர் எனப் படிப்படியாக உயர்ந்தார். இயல்-கணித அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். மாஸ்கோ லெபடெவ் இயற்பியல் கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் துறைத் தலைவராக 1934 முதல் 1971 வரை பணியாற்றினார்.

திடப்பொருட்களின் மேற்பரப்பில் காணப்படும் வினோத வடிவிலான எலெக்ட்ரான் பிணைப்பு, திடப்பொருட்களில் சிதறுண்ட ஒளியின் குவாண்டம் கோட்பாடு ஆகியவை குறித்து இவரது ஆரம்பகால ஆராய்ச்சிகள் இருந்தன. 1934 ஆம் ஆண்டில், நியூட்ரானுக்கு பூஜ்ஜியமற்ற காந்த தண்மை இருப்பதாக டாம் மற்றும் விந்து ஆல்ட்ஷுல்லர் பரிந்துரைத்தனர். நியூட்ரான் பூஜ்ஜியக் கட்டத்துடன் ஒரு அடிப்படை துகள் என்று கருதப்பட்டதால், அந்த நேரத்தில் அந்த யோசனை சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஒரு காந்த தண்மை இருக்க முடியாது. அதே ஆண்டில், புரோட்டான்-நியூட்ரான் இடைவினைகள் இன்னும் அறியப்படாத துகள் மூலம் பரவும் பரிமாற்ற சக்தியாக விவரிக்கப்படலாம் என்ற கருத்தை டாம் உருவாக்கினார். இந்த யோசனை பின்னர் ஹிடெக்கி யுகாவாவால் மீசன் சக்திகளின் கோட்பாடாக உருவாக்கப்பட்டது. திரவப் பொருட்களின் வழியாக காமா கதிர்கள் கடந்து செல்லும்போது ஒளி உமிழப்படுகிறது என்பதை 1934ல் கண்டறிந்தார்.

பிறகு சார்பியல் கோட்பாடு, குவாண்டம் இயக்கவியல் பற்றிய ஆராய்ச்சிகளில் இவரது கவனம் திரும்பியது. “அணுத் துகள்களின் எதிர்வினைகளை விளக்கும் முறையை” வகுத்தார். 1940-50ம் ஆண்டுகளில் ‘சோவியத் தெர்மோநியூக்ளியர் குண்டு’ திட்டத்தில் இணைந்து பணியாற்றினார். “ஹைட்ரஜன் குண்டு தயாரிப்பதற்கான கோட்பாட்டுப் பிரிவின் தலைவராக” பணிபுரிந்தார். முதல் ஹைட்ரஜன் குண்டுவெடிப்பு சோதனை வெற்றிக்குப் பிறகு தன் பதவியை ராஜினாமா செய்தார். கதிர்வீச்சு தொடர்பாக ‘டேம் டான்காஃப் அப்ராக்ஸிமேஷன்’ என்ற எளிய கணக்கீட்டு முறையைக் கண்டறிந்து அறிமுகப்படுத்தினார்.

மின்காப்புப் பொருள் வழியாக மின்சுமையுடன் கூடிய பொருள் கடந்து செல்லும்போது “மின்காந்தக் கதிர்வீச்சு” வெளிப்படுகிறது என்பதைக் கண்டறிந்த மூன்று சோவியத் ஆராய்ச்சியாளர்களில் இவரும் ஒருவர். ‘செரன்கோவ் வாவிலோவ் விளைவு’ (Cherenkov-Vavilov effect) எனப்படும் அந்த கண்டுபிடிப்புக்காக அவர்களுடன் சேர்ந்து 1958ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை இகார் டேம் பகிர்ந்துகொண்டார். இதன்மூலம், எலெக்ட்ரான், புரோட்டான் போன்ற துகள்களின் திசைவேகத்தை கணக்கிட முடியும். லொமோனோசோவ் தங்க பதக்கம்,சோஷலிஸ்ட் தொழிலாளர் ஹீரோ ஆணை ஸ்டாலின் பரிசு போன்ற பரிசுகளை பெற்றார். தனது வாழ்வில் இறுதி வரை அறிவியல், கணித ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட இகோர் எவ்ஜெனீவிச் டாம் ஏப்ரல்12, 1971ல், தனது 75வது அகவையில் மாஸ்கோ, ரஷியாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
- சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் ஆளுநர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரியில் கல்வி இன்டர்நேஷனல் பொதுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. எல்கேஜி முதல் […]
- பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரின் சுயசரிதை நூல் வெளியீடுபி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையை புத்தகமாக எழுதி […]
- மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் செயின் பறித்த கொள்ளையன் சிக்கினான்மதுரை சோழவந்தான் அருகே துணிகரம் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் தங்க […]
- திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துதிடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்து விருதுநகர் அருகே […]
- மதுரை அருகே விபத்தை தவிர்க்க கடைக்குள் புகுந்த கார்மதுரை பசுமலை பகுதியில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் விபத்தை தவிர்க்க கார் அருகில் […]
- காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற 3 பேர் கைது.!!மதுரையில் காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற இளம்பெண்ணின் குடும்பத்தினர்- 3 பேரை கைது செய்து போலீசார் […]
- முடி சூட்டும் விழா முடிந்தது.. மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியது.. ராகுல் காந்திமல்யுத்த வீரர் வீராங்கனைகள் கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்பாஜக […]
- செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது -முதல்வர் மு .க ஸ்டாலின்.மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. என […]
- பேப்பர் மற்றும் மை விலையை கட்டுப்படுத்த வேண்டும்- மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் தீர்மானம்கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் பேப்பர் மற்றும் மை விலையிணை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த […]
- புது நாடாளுமன்றம் திறக்கும் நாளில் நிலநடுக்கத்தால் குலுங்கிய தலைநகர் டெல்லிவரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், இன்று டெல்லி […]
- ரூ.75 நாணயம் கருப்பு நிறமாக இருப்பது ஏன்?இந்திய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு […]
- முதல் நாளே பிரச்சனை-புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகள் கைது
- உலகபட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 1000 பேருக்கு மதிய உணவுஉலகபட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 பேருக்கு மதிய உணவு […]
- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!..வெயில் படிப்படியாக குறையும்தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக […]
- மருத்துவகல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து-தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்மருத்துவக்கல்லூரிக்கான அங்கீராரம் ரத்து செய்யப்பட தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கே காரணம் என […]