படிம குறைகடத்திச் சுற்று (CCD) உணரியைக் கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் ஜோர்ஜ் எல்வூட் ஸ்மித் பிறந்த தினம் இன்று (மே 10, 1930).
ஜோர்ஜ் எல்வூட் ஸ்மித் (George Elwood Smith) மே 10, 1930ல் ஸ்மித் வைட் பிளைன்ஸ், நியூயார்க்கில் பிறந்தார். ஸ்மித் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றினார். இவர் தனது இளநிலை பட்டத்தை 1955ம் ஆண்டு பென்சில்வேனியப் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டத்தை 1959ல் சிகாகோ பல்கலைக்கழகத்திலும் பெற்றார். இவரது ஆய்வேடு வெறும் மூன்று பக்கங்களை மாத்திரம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஸ்மித் முர்ரே ஹில், நியூ ஜேர்சியிலுள்ள பெல் ஆய்வுகூடத்தில் 1959ம் ஆண்டிலிருந்து 1986ல் ஓய்வு பெறும் வரை பணியாற்றினார். இங்கு அவர் புதிய லேசர் கதிர்கள் மற்றும் குறைகடத்திச் சாதனங்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். தமது பதவிக்காலத்தில், பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெற்றார். மேலும் அவர், பேரளவு ஒருங்கிணைச் சுற்று (VLSI) சாதனப் பணியகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
1969ல் ஸ்மித்தும் பாயிலும் சேர்ந்து மின்மம் வழிந்துநகர் கருவியைக் (charge-coupled device, CCD) கண்டுபிடித்தார். இதற்காக இவ்விருவரும் 1973ல் பிராங்க்கிலின் கழகத்தின் (Franklin Institute), இசுட்டூவர்ட் பாலன்ட்டைன் பதக்கம் (Stuart Ballantine Medal) பெற்றார்கள். 1974ல் ஐ.இ.இ.இ நிறுவனத்தின் மாரிசு லீபுமன் நினைவுப் பரிசும் (IEEE Morris N. Liebmann Memorial Award), 2006ல் டிரேப்பர் பரிசும் (Charles Stark Draper Prize), 2009ல் இயற்பியலுக்கான நோபல் பரிசும் பெற்றார்கள். ஸ்மித்தும் பாயிலும் கடற்ப்பயணத்தில் ஆர்வமுடையோராவர்.

இவர்களிருவரும் இணைந்து பல பயணங்களை மேற்கொண்டுள்ளனர். ஓய்வுபெற்ற பின்னர் தனது வாழ்க்கைத்துணையான ஜெனட்டுடன் பதினேழு வருடங்கள் உலகம் முழுவதும் பயணித்தார். எனினும் 2003ம் ஆண்டின் பின்னர் எலும்புச் சிதைவினால் தனது பொழுதுபோக்கான பயணம் மேற்கொள்ளலை நிறுத்திக் கொண்டார். இவர் தற்போது வார்டவுன், நியூ ஜேர்சியில் வசிக்கிறார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]
- மதுரை மாநகரில் அசுர வேகத்தில் பறக்கும் இருசக்கர வாகனங்கள்மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் பொதுமக்கள் […]
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]
- 2 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி […]
- மாரடைப்பால் உயிரிழந்த போதும் பயணிகள் உயிரை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்அருப்புக்கோட்டை அருகே, அரசு பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு…வண்டியை சாலையோரமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.மதுரை, […]
- மதுரையில் எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது […]