தேனி மாவட்டம், போடி தாலுகா சிலமலையில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவில் திருமண மண்டபத்தில் இன்று (பிப்., 1) காலை 11 மணியளவில், தேனி மாவட்ட சிவசேனா கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா நடந்தது. இவ்விழாவில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் கட்சியில் இணைந்தனர். மேலும் தேனி மாவட்ட சிவசேனா கட்சி இளைஞரணி மாவட்ட தலைவராக கார்த்திக், போடி ஒன்றிய தலைவராக தினேஷ் குமார் மற்றும் செயலாளராக ஜெகன் குமார் ஆகியோர் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு, தேனி மாவட்ட தலைவர் குரு ஐயப்பன் தலைமை வகிக்க, மாவட்ட பொதுச் செயலாளர் கருப்பையா முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் முருகவேல் வரவேற்றார். மாவட்ட செயலாளர் முனீஸ் அபிஜித், துணைச் செயலாளர் சசிக்குமார், இணை அமைப்பாளர் நாட்ராயன், மாவட்ட செயலாளர்
ராஜேந்திரன் மற்றும் தேவாரம் பகுதி பொறுப்பாளர்களும், மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்:
தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்த ஆவணம் செய்ய வேண்டும். இந்து அறநிலையத்துறைக்கு சம்பந்தமான பள்ளி, கல்லூரிகளில் இந்து மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் கவுரவ உயர் பதவிகள் இந்துக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். மாறாக நாத்திகவாதிகள் இடம் பெறுவதை தடுக்க வேண்டும். மேலும், தேனி மாவட்ட சுற்றுப்புற திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் தனியார் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நிலங்களை மீட்டெடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும், என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]
- குறள் 449முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை.பொருள் (மு.வ):முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் […]
- ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட ரஜினிகாந்த்இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் […]
- மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் – அமைச்சர் தகவல்சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுரத்து செய்யப்படுவதாக […]
- வீடியோ கேமுக்கு அடிமையான மாணவன் தற்கொலையை நேரடி ஒளிபரப்பு செய்த கும்பல்கேரளாவில் வீடியோ கேமுக்கு அடிமை; இன்டர்நெட்டில் நேரலையாக ஒளிபரப்பி மாணவனை தற்கொலை செய்ய வைத்த கும்பல்கேரள […]