டிஜிட்டல் நாரதர்
தமிழ்நாட்டு கிராமத்து பக்கம் சாட மாடயாக கூறுவது உண்டு. வேலை செய்யாம தாஜா பண்ற தொழிலாளி கிட்ட முதலாளி கேப்பாராம் என்னடா இப்படி வேலை பண்ணி வச்சுருக்கேன்னு, ஒரு கட்டத்துல விரக்தில உன் குடும்பத்துல இருக்குறவன் யார் கிட்டையோ கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட்டு இருக்கேன். அந்த கொடுமைக்கு தான் நீ எனக்கு வந்து தொழிலாளியா வந்து சிக்கிருக்கனு. இது போல தான் அரசியல் களம் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் ,பிரச்சாரம், கூட்டணி என சூடு பறக்க சுத்திட்டு இருக்கும் போது ஒரே ஒரு பக்கம் மட்டும் அமைதியா இருக்கு. ஆமாங்க வேற யாரும் இல்ல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு ஜெயிலுக்கு போகும் போது கட்சியினாரால் சின்னம்மானு பேரு எடுத்தவங்களும் , ஜெயிலுக்கு சென்று பின்பு விடுதலையாகி 23 மணி நேரம் காரில் உக்காந்துகிட்டு பயணம் செய்து வந்து புரட்சித்தாய் என புரோமோசன் பெற்றவர் தான் சசிகலா நடராஜன்.
இந்த நேரத்துல இவங்களுக்கும அரசியலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு அவங்க அரசியல் இருந்து விலகுறேன்னு சொல்லிடாங்க, அதுக்கு அப்புறம் எதுக்கு வம்புக்கு இழுக்குறீங்கனு கேக்குறீங்களா ? அங்க தான் இருக்கு இந்த டிஜிட்டல் நாரதர் சொல்லக்கூடிய ஒரு மாஸ்டர் சீக்ரெட். அதாவது இவங்க ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சு உங்க எல்லாருக்கும் தெரியும் அந்த தர்ம யுத்தம் பார்ட் 1, ரிவர்ஸ் யுத்தம் பார்ட் 1 என தான் கை நீட்டியவர்கள் தங்களுக்கு எதிராக திரும்பிட்டாங்கனு அப்செட் இருந்தாங்க சசிகலா. அப்படி இருந்தவங்களுக்கு பூஸ்ட் கொடுக்குற மாதிரி அமமுக என்ற கட்சி வச்சு எல்லார் கண்ணுலையும் விரல் விட்டு ஆட்டிட்டு இருந்தாரு டிடிவி தினகரன்.
அதிமுக டு அமமுக வார் நடந்துட்டு இருந்த போது சசிகலா விடுதலையாகும் போது அதிமுகவிற்கு எந்த வித நெருக்கடியும் கொடுக்க கூடாது என டெல்லி மேலிடம் சைலன்ட் உத்தரவு போட்டாங்க. வெளிய வந்து வழக்கம் போல தங்களோட வேலைய காட்ட ஆரம்பிக்கவும் சொத்து மேல மத்திய அரசு கைய வச்சாங்க. இதுல ஆடி போனவங்க தான் அதிமுக பொதுச்செயலாளர்னு சொல்லிட்டு அறிக்கை விட ஆரம்பிச்சாங்க ஜெயலலிதா எம் ஜி ஆர் சமாதிக்கு போறதுன்னு அப்போ அப்போ வெளிய தலை காமிச்சாங்க , அப்புறம் அறிக்கை மூலமா வாழ்த்து செய்தி கொடுத்தாங்க.
இதெல்லாம் சரிங்க புரட்சித்தாயே கட்சியை எப்போ மீட்டு எடுக்கப்போறோம்னு தொண்டர்கள் எல்லாரும் பொறுமையா இருங்க , தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மீண்டும் வெல்லும்னு தல அஜித் மாதிரி அப்போ அப்போ வாட்ஸ்அப்ல மோடிவேசன் ஆடியோ ரிலீஸ் பண்ணிட்டு இருந்தாங்க.
பாஜக அதிமுக முழுவதுமா தங்களோட கட்டுப்பாட்டுல கொண்டு வர முயற்சி பண்றாங்க எதாவது பண்ணுங்க சின்னம்மானு அமமுக கட்சி காரங்க மட்டும் இல்ல, அதிமுகவினரும் கதற ஆரம்பிச்சாங்க. அப்போவும் சசிகலா அமைதியாக பொறுமையே பெருமைனு அமைதியாகிட்டாங்க. இதுனால கட்சிக்காரங்க தினகரன பார்க்க அவர் சின்னம்மாவ பார்க்க அவங்க பாயின்ட் வரட்டும் பாயின்ட் வரட்டும்னு கட்சி எதிர்காலத்தை பார்க்க. இது சரிப்பட்டு வராதுன்னு.டிடிவி தினகரன் பொறுப்புள்ள அப்பாவா அவரோட பொண்ணுக்கு கல்யாண வேலையில பிஸிஆகிட்டாரு. அந்த சின்ன இடைவெளியில கொத்து கொத்தா கட்சியில இருந்து ஆளுங்க வெளியேற ஆரம்பிச்சாங்க. சரி போறது தான் போறீங்க திமுக கட்சிக்கு போங்க அதிமுகவிற்கு வேணாம்னு எல்லாரையும் வழி அனுப்பியும் விட்டாரு. ஆனால் இவ்வளவு நடந்து எந்த வித நடவடிக்கையும் நறுக்க எடுக்க முடியாம எதுக்கு சின்னம்மா வேடிக்கை பார்க்குறாங்கனு இப்போ தான் லேசா குரல் கேட்க ஆரம்பிச்சு இருக்கு இது பெரிய குரலாக மாறுவதுக்கு முன்னரே சசிகலா ஒரு நல்ல முடிவு எடுக்கணும். நாங்க உங்க கிட்ட கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட்டு இருக்கோம் போல , அதுனால இப்போவும் கடலை மிட்டாய் வேண்டாம்மா கொஞ்சம் கண் திறந்து பாருங்க சின்னம்மானு கட்சியினர் கண்ணீர் மல்க கதறுகின்றனர்.
- பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் […]
- ஜப்பான் சென்ற முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் – பாஜக பொதுச்செயலாளர் பேட்டிமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக […]
- தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தை பாம்புகடித்து பலிதிருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 […]
- தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த காட்டு யானைதமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் […]
- ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதாரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை […]
- மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனுதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பர் உரிமை சங்கத்தின் சார்பாக இன்று மதுரை மாவட்ட […]
- மதுரையில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி.!!சேலத்தை தலைமையிடமாக கொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் […]
- ரயில் ஓட்டுநர்களுக்கு கடும் விதிகள்ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட் பணி நேரத்தின்போது பாண் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஐஸ்வர்யம் ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் […]
- இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, […]
- பொது அறிவு வினா விடைகள்
- அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் தொகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் […]
- இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் […]
- வாட்ஸ்அப்-க்கும் வந்தாச்சு ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்!வாட்ஸ்அப் செயலியில் விரைவில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் […]
- குறள் 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் […]